இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோன் நெக்ஸ்ட், சந்தைக்கு வரும் முன்பே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் இந்தியாவில் தீபாவளிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளமாக ஜியோபோன் இருக்கலாம். இது டிஜிட்டல் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
ஸ்மார்ட்போன் மாற்றம்
இது டிஜிட்டல் மாற்றத்தினை முன்னெடுத்து செல்லலாம் என கூறியுள்ளார். இது ஃபீச்சர் போன்களில் இருந்து ஸ்மார்ட்போனுக்கு மாற விரும்பும் மக்களின் தேவையை அறிந்து, இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அனைத்து ஸ்மார்ட்போன்களும், மலிவு விலையில் வெளிவரலாம் என கூறப்படுகிறது.
டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளம்
இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் பிரகதி OS மற்றும் குவால்காம் ப்ராசஸர் அடிப்படையில் இயங்குகிறது. இது டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளமாக ஜியோபோன் நெக்ஸ்ட் பார்க்கப்படுகிறது என முதலீட்டாளர்களுக்கு சுந்தர் பிச்சை கூறியுள்ளார். அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், உயர்தரமான ஒரு ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவெடுக்கும் எனவும் கூறியுள்ளார்.
ஜியோபோன் வீடியோ
ஒட்டுமொத்தமாக ஆசியா பசிபிக்கைப் போலவே, இந்தியாவும் எங்களுக்கு உற்சாகமான சந்தையாக இருக்கும் என்று கூறியுள்ள ஜியோ, இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் குறித்து சமீபத்தில் ஒரு டீஸர் வீடியோவினை வெளியிட்டது. அதில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஆனது OS, ஆண்ட்ராய்டு, குவால்காம் ப்ராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை எவ்வளவு?
இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன், ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது என பல விவரங்களையும் அந்த வீடியோவில் சுட்டி காட்டியிருந்தது. இப்படி பல அம்சங்களுடன் உள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலையானது ஜியோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3,499 அல்லது $50க்கு கீழ் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகேஷ் அம்பானி
செப்டம்பரில், ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்களின் கூட்டு செய்திக்குறிப்பில், வரையறுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் ஜியோபோன் நெக்ஸ்டை சோதிக்கத் தொடங்கியுள்ளதாகவும், தீபாவளிக்கு இது கிடைக்கச் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது சுந்தர் பிச்சையிம் அறிவிப்பும் வந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications