ஒட்டுமொத்த இந்தியாவே டி20 உலக கோப்பை இறுதி போட்டிகள் குறித்து தான் பரபரப்பாக பேசுகிறது. எப்படியாவது இந்தியா இந்த கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என கோடிக்கணக்கான இந்தியர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானவர்கள் போட்டி நடைபெறக்கூடிய நரேந்திர மோடி மைதானத்தில் குவிந்திருக்கின்றனர். இது தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொது இடங்களில் திரைகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டிகளை கண்டு ரசிக்கின்றனர். கிரிக்கெட் போட்டிகள் என்பது இந்தியர்களின் உணர்வுடன் கலந்த ஒரு விஷயம் என்பதால் தான் இந்தியா எந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டாலும் கோடிக்கணக்கான மக்களின் பார்வையை பெறுகிறது.

அந்த வகையில் கிரிக்கெட் போட்டிகள் பெரிய லாபம் தரக்கூடிய பல லட்சம் கோடி பணம் புழங்கக்கூடிய ஒரு விளையாட்டு. இதன் காரணமாக தான் பெரும்பாலும் இந்தியா பங்கேற்க கூடிய கிரிக்கெட் போட்டிகள் அனைத்துமே ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடத்தப்படும். அதிகமான மக்கள் அன்றைய தினத்தில் போட்டிகளை கண்டு ரசிப்பார்கள் இது போட்டிகளை நடத்தக்கூடிய அமைப்புகளுக்கும் சரி அவற்றை ஒளிபரப்ப கூடிய நிறுவனங்களுக்கும் சரி பெரிய அளவிலான லாபத்தை பெற்று தரும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டிகள் உலகளவில் ஏற்கனவே ஸ்ட்ரீமிங் தளங்களில் பெரிய அளவிலான பார்வைகளை பெற்று விட்டன. மார்ச் ஐந்தாம் தேதி அன்று இந்தியா இங்கிலாந்து இடையிலான அரை இறுதி போட்டி உலக அளவில் இதுவரையும் அதிகமானவர்கள் டிஜிட்டல் தளத்தில் பார்த்த விளையாட்டுப்போட்டி என்ற சாதனையை படைத்திருக்கிறதாம். இந்தியாவில் அந்த ஒரு நாளில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டும் 65.2 மில்லியன் பேர் அந்த போட்டியை பார்த்திருக்கின்றனர். இது வேர்ல்ட் ரெக்கார்ட் என சொல்லப்படுகிறது.

உலகிலேயே வேறு எந்த டிஜிட்டல் தளத்திலும் ஒரே சமயத்தில் இவ்வளவு மக்கள் ஒரு நிகழ்ச்சியை கண்டது இதுவே முதன்முறையாம். இந்தியா பங்கேற்ற அரையிறுதி போட்டியை மொத்தம் 619 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகமான ஆன்லைன் பார்வைகளை பெற்ற போட்டி என்ற பெருமையும் இதற்கு கிடைத்திருக்கிறது. தொலைக்காட்சி மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் அதிகமானவர்கள் பார்த்த ஒரு விளையாட்டு போட்டி என்ற பெருமையும் இந்த அரையிறுதி போட்டிக்கு தான் கிடைத்திருக்கிறது.
320 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள், வாட்ச் டைம் என்பது 23 பில்லியன் நிமிடங்களாக இருந்திருக்கிறது. அதாவது மூன்றில் ஒரு இந்திய அரையிறுதி போட்டியை பார்த்திருக்கிறார்கள் என்கிறது ஒரு தகவல். நிச்சயமாக இந்த ரெக்கார்ட் இன்றைய தினம் இறுதிப் போட்டியில் பிரேக் செய்யப்பட்டு விடும். அதைவிட அதிகமானவர்கள் இறுதிப்போட்டியை கண்டு ரசிப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.
இது ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திற்கு பெரிய அளவிலான வருமானத்தையும் ஈட்டி தந்து இருக்கிறது என்பதுதான் உண்மை. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனம் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ ஊடக உரிமையா உரிமையாளராக இருக்கிறது. இந்தியா நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டியை கோடிக்கணக்கான மக்கள் பார்வையிடுவார்கள் என்பதால் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதற்கு பல்வேறு நிறுவனங்களும் கடுமையாக போட்டியிடுகின்றன.
அந்த வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒவ்வொரு 10 செகண்ட் அதாவது ஒவ்வொரு 10 நொடி விளம்பரத்திற்கும் 50 லட்சம் ரூபாயில் கட்டணமாக டிமாண்ட் செய்வதாக எக்கனாமிக்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. எவ்வளவு தொகையாக இருந்தாலும் பரவாயில்லை என நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு 50 லட்சம் என அதற்கு மேல் கூட பணத்தை கொடுத்து விளம்பரங்களை வெளியிடுவதற்கு தயாராக இருக்கின்றனவாம்.
இறுதிப் போட்டி என்பதால் ஏராளமான மக்கள் பார்வையிடுவார்கள், அதே வேலையில் இந்த போட்டிக்கான அட்வர்டைசிங் இன்வென்ட்ரி நேரம் என்பது லிமிடெட் ஆக தான் இருக்கிறது என்பதால் அதற்குள் ஒரு விளம்பர சிலாட்டினையாவது பெற்று விட வேண்டும் என நிறுவனங்கள் மத்தியில் போட்டியாக இருக்கிறது. அந்த வகையில் நாம் பார்க்கக்கூடிய ஒவ்வொரு நொடியும் முகேஷ் அம்பானிக்கு 5 லட்சம் ரூபாயை சம்பாதித்து தருகிறது. ஒவ்வொரு 10 நொடி விளம்பரமும் ஜியோவுக்கு 50 லட்சம் ரூபாய் வருமானத்தை பெற்று தருகிறது.
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதி போட்டி: கோப்பையுடன் சேர்த்து இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்பிரைஸ்!!

தோனி-க்கு நிகராக சஞ்சு சாம்சன்.. குரு சிஷ்யன் என்றால் சும்மாவா..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications


