இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி சேம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற கலைப்பில் இருந்து மீண்டு வரும் வேளையில், உலகளாவிய கிரிக்கெட் ஸ்டார்கள் அனைவரும் இந்தியாவுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். ஆம், இந்த ஆண்டு அனைவரும் எதிர்பார்க்கப்படும் டாடா-வின் இந்தியன் பிரீமியர் லீக், அதாவது ஐபிஎல் போட்டி அடுத்த சில நாட்களில் துவங்க உள்ளது.
ஐபிஎல் வெறும் விளையாட்டுப் போட்டி என்பதைத் தாண்டி உலகளாவிய பிராண்டுகளுக்கான ஒரு தளம் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டு பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் ஒரு வர்த்தக வாய்ப்பு தான் இந்த ஐபிஎல். விளையாட்டு மற்றும் பிராண்டுகளை சங்கமிக்கும் ஒரு இடமாக ஐபிஎல் விளங்குகிறது. எப்படி அமெரிக்காவுக்கு ஒரு சூப்பர் பவுல் இருக்கிறதோ இதேபோல் இந்தியாவுக்கு ஐபிஎல்.

இந்த ஆண்டு, கொஞ்சம் ஸ்பெஷல் எப்போதும் ஐபிஎல் ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமம் இரண்டு நிறுவனங்களிடம் பிரிந்து இருக்கும், ஆனால் முதல் முறையாக இந்த ஆண்டு ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமத்தை ஜியோஸ்டார் கூட்டணி கொண்டு இந்த ஐபிஎல் நடக்க உள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் ஓன் ஸ்டாப் சொல்யூஷனாக ஜியோஸ்டார் உள்ளது. இதனாலேயே விளம்பர கட்டணம் தடாலடியாக உயரும் என்ற கருத்து உள்ளது.
ஐபிஎல் போட்டியின் கடந்த ஒளிபரப்பு உரிமம் ஏலத்தில் ஓடிடி உரிமத்தை ஜியோவும், டிவி உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க்-ம் பெற்றது. ஆனால் தற்போது இவ்விரு நிறுவனங்களும் இணைந்துள்ள காரணத்தால் ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமம் ஒரே நிறுவனத்தின் கையில் வந்துள்ளது.
இந்த நிலையில் 2025 ஐபிஎல் போட்டிக்கு ஜியோஸ்டார் சுமார் 20 முன்னணி ஸ்பான்சர்களை பெற்றுள்ளது. பொதுவாக ஐபிஎல் சீசனில் ஒளிபரப்பு உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் கிரிக்கெட் விரர்களும் அதிகப்படியான விளம்பர வருவாய் பெறுவார்கள். இந்தியாவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என திட்டமிடும் நிறுவனங்கள், இந்தியாவில் வர்த்தகம் துவங்க வேண்டும் என திட்டமிடும் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த ஐபிஎல் சிறப்பான வாய்ப்பை அளிக்கும். இதேவேளையில் கிரிக்கெட் வீரர்களும் பெரிய அளவில் கல்லாகட்டுவார்கள்.
இந்த நிலையில் டாடா ஐபிஎல் 2025க்காக ஜியோஸ்டார் பல்வேறு புகழ்பெற்ற பிராண்டுகளுடன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை செய்துள்ளது. இந்த பட்டியலில் முக்கியமாக மை11சர்க்கிள், கேம்பா எனர்ஜி, பிர்லா ஓபஸ், போக்கர்பாஸி, எஸ்பிஐ, போன்பே, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சஹி ஹை, தம்ஸ் அப், கூகுள் சர்ச், ஆலன் சோலி, ஜாகுவார் பாத் + லைட், ஜிபே, கென்ட் குஹ்ல் ஃபேன்ஸ், ட்ரீம்11, ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கேம்பா, ஜாய் காஸ்மெட்டிக்ஸ், டிவிஎஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஜூப்பி மற்றும் அமுல் ஆகியவை இதில் அடங்கும்.
ஐபிஎல் 2025 விளம்பர வருவாய் மட்டும் ரூ. 6,000 முதல் 7,000 கோடி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருவாய் டிவி மற்றும் டிஜிட்டல் தள விளம்பரங்கள், டீம் ஸ்பான்சர்ஷிப் மற்றும் ஆன் கிரவுண்ட் விளம்பர ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதல்கட்ட கணிப்புகள் மட்டுமே, போட்டியின் இறுதியில் இத்தொகை அதிகரிக்கலாம், அல்லது குறையலாம்.
ஐசிசி சேம்பியன்ஸ் டிராபி கோப்பை இறுதி போட்டியில் சுமார் 82 கோடி மக்கள் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தின் வாயிலாக மட்டுமே பார்த்தனர். இந்த எண்ணிக்கையை டாடா ஐபிஎல் 2025 முறியடிக்குமா என்பது காத்திருந்து தான் பார்க்க வேண்டும். மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெற உள்ள இந்த போட்டி, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மன்னிக்கவும் கிரிக்கெட் வெறியர்களை ஸ்கிரீன் முன்பு உட்கார செய்யும் என்பதால் கட்டாயம் 82 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications