8.72 லட்ச மத்திய அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அடுத்த 5 வருடத்தில் இந்தியாவில் புதிதாக 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும், கூடுதலாக 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியும் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் மார்ச் 1, 2020 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 8.72 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதேபோல் இந்தியா முழுவதும் மாநில அரசு பணியிடங்களும் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 8.72 லட்சம் பணியிடங்கள் காலி

8.72 லட்சம் பணியிடங்கள் காலி

இன்று ராஜ்ய சபாவில் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி மார்ச் 1, 2020 நிலவரத்தின் படி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 8.72 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. எந்தத் துறையில் எவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளது எனத் தெரிவிக்கவில்லை.

 ஜிதேந்திர சிங்

ஜிதேந்திர சிங்

மார்ச் 1, 2019ல் 9,10,153 மத்திய அரசு பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், மார்ச் 2020ல் 8,72,243 ஆகக் குறைந்துள்ளது. இது மார்ச் 2018ல் 6,83,823 ஆக இருந்தது என எழுத்து வாயிலாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

 3 வேலைவாய்ப்பு அமைப்பு

3 வேலைவாய்ப்பு அமைப்பு

மத்திய அரசு தொடர்ந்து பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBs) ஆகிய அமைப்புகளின் வாயிலாகப் பணியிடங்களை நிரப்பி வருகிறது.

 2,65,468 பேருக்கு வேலை

2,65,468 பேருக்கு வேலை

மத்திய அரசு இந்த 3 அமைப்புகள் நடத்திய பல்வேறு தேர்வுகளின் வாயிலாக 2018-19 முதல் 2020-21 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 2,65,468 ஊழியர்களைப் பணியில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம்

பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம்

சமீபத்தில் பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரயில்வே வேலைவாய்ப்புகளுக்குத் தேர்வு செய்யும் பணியில் குளறுபடி, முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து இரு மாநிலத்திலும் மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 1 கோடி விண்ணப்பம்

1 கோடி விண்ணப்பம்

வெறும் 40000 ரயில்வே வேலைவாய்ப்புகளுக்கு 1 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் போராட்டம் இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை போராட்டமாகப் பார்க்கப்பட்டது.

 மிகப்பெரிய போராட்டம்

மிகப்பெரிய போராட்டம்

சிறிதளவில் துவங்கிய போராட்டம் ஒருவாரத்தில் மிகப்பெரிய போராட்டமாக இரு மாநிலத்திலும் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் ரயில் பாதையில் போராட்டம், ரயில் பெட்டியில் கல் எறிதல், ரயில் பெட்டிகளை எரிக்கும் வரையில் தீவிரமாக மாறியுள்ளது. பல இடங்களில் மோடியின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+