ஜேகே சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த அக்டோபர் - டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், அதன் நிகரலாபம் 74.82% அதிகரித்து, 217.28 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் இதே காலாண்டில் வெறும் 124.29 கோடி ரூபாய் லாபத்தினை கண்டிருந்ததாக, பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 24.52% அதிகரித்து 1832.71 கோரி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1471.78 கோடி ரூபாயாக இருந்ததாக இந்த நிறுவனம் வெலியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
வருவாய் அதிகரித்துள்ள அதே சமயத்தில் இதன் செலவும் 24.52% அதிகரித்து 1832.71 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் 1318.80 கோடி ரூபாயாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்த நிறுவனத்தின் குழு கூட்டத்தில், 4 மில்லியன் டன் ஒருங்கிணைந்த கீரின் ஃபீல்ட் சாம்பல் சிமெண்ட் ஆலையை, மத்திய பிரதேசத்தின் பன்னாவில், அதற்கு சொந்தமான துணை நிறுவனமான ஜெய்காம் லிமிடெட் நிறுவனத்தில் நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஜேகே சிமெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனுடன் உத்திரபிரதேசத்தில் ஒரு அரைக்கும் யூனிட் அலகுடன், இந்த திட்டத்திற்கு 2,970 கோடி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த ஜேகே சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் 31.05 ரூபாய் குறைந்து, 2245 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இந்த அறிவிப்புகள் சனிக்கிழமையன்று வந்ததால், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது நாளை நல்ல மாற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கும் இது நல்ல லாபத்தினை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.