உலகில் பல நாடுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை உற்பத்தி மற்றும் பயன்பாட்டை விரைவில் நிறுத்த திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஜாகுவார் லேண்டு ரோவர், வால்வோ, பென்ட்லி, போர்டு ஐரோப்பா ஆகியவை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் கார் தயாரிப்புகளை நிறுத்திவிட்டு முழுமையாக எலக்ட்ரிக் கார் நிறுவனமாக மாற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் எலக்ட்ரிக் கார் பயன்பாட்டுக்கான தளத்தை உருவாக்கியுள்ளது.
எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்
இந்தியாவில் வர்த்தகம் செய்யும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிப்பது மட்டும் அல்லாமல் விற்பனையும் செய்து வரும் நிலையில், எந்த நிறுவனமும் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்-ஐ அமைக்கத் திட்டமிடவில்லை.
இதனால் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது.
எலக்ட்ரிக் கார் பயணங்கள்
இந்நிலையில் எலக்ட்ரிக் கார் பயணங்களை மேம்படுத்துவதற்காக ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்துள்ளது. டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேண்டுரோவர் நிறுவனம் இந்தியாவின் 19 பெரு நகரங்களில் இருக்கும் 22 கார் ஷோரூம்களில் சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்துள்ளது.
ஜாகுவார் I-Pace கார்
இந்தியாவில் ஜாகுவார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான I-Pace கார் விற்பனைக்கு வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்குக் கார்களை விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் பயணங்களை மேம்படுத்துவதற்கான பணிகளையும் செய்துள்ளது ஜாகுவார் லேண்டுரோவர் நிறுவனம்.
டாடா பவர் சார்ஜிங் ஸ்டேஷன்
டாடா நிறுவனத்தின் எல்க்டிரிக் வாகன விற்பனை சூடுபிடிக்கத் துவங்கி நாளில் இருந்து டாடா மோட்டார்ஸ் டாடா பவர் உடன் இணைந்து நாட்டில் 200க்கும் அதிகமாகச் சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சார்ஜிங் ஸ்டேஷன் மால், உணவகம், அலுவலகம், அப்பார்ட்மென்ட் மற்றும் சில நெடுஞ்சாலைகளிலும் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications