இந்திய ஊழியர்களுக்கு பாதிப்பு அதிகம்.. கைண்டரில் பணி நீக்க முடிவால் கண்ணீர்..!

ஐபிஎம்மில் இருந்து பிரிந்த கைண்டரில் நிறுவனம் இந்தியாவில் பணி நீக்கம் செய்யும் ஒரு சமீபத்திய டெக் நிறுவனமாகும். இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம் ஓய்வூதியமாக வழங்கப்படலாம் என தெரிகிறது.

இந்த பணி நீக்கம் குறித்தான அறிவிப்பானது மார்ச் 29 அன்று வெளியாகியுள்ளது.

தொடர்ந்து சர்வதேச அளவில் பணி நீக்கம் என்பது இருந்து வருகிறது. குறிப்பாக டெக் துறையில் பணி நீக்கம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் கைண்டரில் அறிவிப்பானது பெரும் அதிர்ச்சியளிக்காவிட்டாலும், அதன் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி அளித்துள்ளது.

ஐபிஎம் ஸ்பின் ஆப் கைண்டரில்

ஐபிஎம் ஸ்பின் ஆப் கைண்டரில்

கூகுள், மைக்ரோசாப்ட் தொடங்கி அமேசான் வரையில் பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளன. புதிய பணியமர்த்தலை நிறுத்தியுள்ளன. இந்த நடவடிக்கையானது இன்று வரையில் தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் தான் ஐபிஎம்மில் இருந்து பிரிந்த கைண்டரில் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளது.

மறுசீரமைப்பு நடவடிக்கை

மறுசீரமைப்பு நடவடிக்கை

தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், நாங்கள் உலகளவில் பல்வேறு ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறோம். இது நிலவி வரும் போட்டித் தன்மைக்கு மத்தியில், சிறிய அளவிலான பணி நீக்கம் தான். இது எங்களின் செயல்பாட்டினை நெறிப்படுத்தவும், மேற்கொண்டு எங்களது நிறுவனத்தினை சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்தியர்கள் பாதிப்பு

இந்தியர்கள் பாதிப்பு

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இத்தகைய நடவடிக்கையானது அவசியமான ஒன்றாகவும் உள்ளது. கைண்டரில் உலகம் முழுக்க சுமார் 90,000 பணியாளர்களை கொண்டுள்ளது.

அதன் உலகளாவிய பணியாளர்களில் 50% பேர் இந்தியாவினை சேர்ந்தவர்கள். ஆக இந்த பணி நீக்க நடவடிக்கையிலும் இந்தியர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் சரிவு

இந்தியாவில் மட்டும் சரிவு

எனினும் இந்த பணி நீக்க நடவடிக்கையில் இந்திய ஊழியர்கள் எவ்வளவு பேர், மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்தான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

ஐபிஎம் கைண்டரில் இந்த பணி நீக்க நடவடிக்கையில் அறிவிக்கப்பட்ட 2 மாத சம்பளம் சலுகையாக அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 6 மாதங்களாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் குறைவாக வழங்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

எந்த துறையில் தாக்கம்

எந்த துறையில் தாக்கம்

இந்த பணி நீக்க நடவடிக்கையில் மார்கெட்டிங், நிர்வாகம், மனித வள நிர்வாகம் மற்றும் பல முக்கிய துறைகளில் உள்ளதாகவும் தெரிகிறது. மிக அதிகளவில் மார்கெட்டிங் மற்றும் மனித வள துறையில் பணி நீக்கம் என்பது இருப்பதாகவும், இத்துறைகளில் தெரிகிறது.

வருவாய்

வருவாய்

கைண்டரில் டிசம்பர் 2022 காலாண்டுடன் முடிவடைந்த காலாண்டில் வருவாய் விகிதம் 4.3 பில்லியன் டாலராகவும், இது கடந்த ஆண்டினை காட்டிலும் 6% சரிவினைக் கண்டும், வரிக்கு முந்தைய நஷ்டம் 138 மில்லியன் டாலரும் மற்றும் நிகர நஷ்டம் 106 மில்லியன் டாலரும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+