உலகின் முன்னணி முதலீட்டு வங்கி நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் சமீபத்தில் முதலீட்டாளர்களுக்கு அனுப்பிய முக்கியமான கடிதத்தில், கிரிப்டோகரன்சி சந்தையின் முக்கிய டிஜிட்டல் கரன்சியாக விளங்கும் பிட்காயினுக்கு அதிகளவிலான ஆதரவைக் கொடுத்துள்ளது.
உலக நாடுகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த வேளையில் பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பு அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கப் பிட்காயினைப் பயன்படுத்த முடியும் என ஜேபி மோர்கன் சேஸ் தெரிவித்துள்ளது.
கிரிப்டோகரன்சி
சர்வதேச சந்தையில் கிரிப்டோகரன்சி மிக முக்கியமான முதலீடாக மாறியுள்ள காரணத்தால் ரீடைல் முதலீட்டாளர்கள் முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் மிகவும் ஆர்வமாகவும் முதலீடு செய்கின்றனர்.
மாற்று முதலீடு
இது மட்டும் அல்லாமல் மாற்று முதலீட்டை தேடும் அனைவருக்கும் கிரிப்டோ முதலீடு முதன்மையானதாகவும், மிகவும் எளிதான ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினர் அதிகளவில் கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.
முதலீட்டாளர்கள் எண்ணிக்கை
உதாரணமாக இந்தியாவின் முன்னணி பங்கு தரகு நிறுவனமான ஜிரோதா தளத்தை விடவும் Warzirx போன்ற தளத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதே நிலை தான் உலகம் முழுவதும். இந்நிலையில் ஜேபி மோர்கன் சேஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேபி மோர்கன் சேஸ்
ஜேபி மோர்கன் சேஸ் தனது முதலீட்டாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கிரிப்டோகரன்சி மதிப்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பணவீக்கம் பிரச்சனையைத் தீர்க்க தங்கத்தின் மீது முதலீடு செய்வதைக் காட்டிலும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து ஈடு செய்யலாம் எனப் பரிந்துரை செய்துள்ளது.
பெரும் தாக்கம்
இதே கருத்தைப் பல முறை பல சந்தை வல்லுனர்கள், முதலீட்டு வல்லுனர்கள் இதற்கு முன்பே அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜேபி மோர்கன் சேஸ் அறிவித்துள்ளதன் மூலம் பெரும் தாக்கம் கிரிப்டோ சந்தையில் உருவாகியுள்ளது.
தங்கம் Vs கிரிப்டோ
முதலீட்டாளர்கள் இதற்கு முன்பு தங்கத்தை விடவும் கிரிப்டோகரன்சி முதலீட்டில் அதிக லாபம் உண்டு எனவும், எளிதாகச் சேமித்து நீண்ட காலத்திற்கு வைத்திருக்க முடியும் எனவும் தெரிவித்தனர். வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் காலகட்டத்தில் சொத்துக்களைச் சேமிப்பது என்பது சாதாரண விஷயமில்லை.
பெரும் முதலீட்டாளர்கள்
இந்தச் சூழ்நிலையில் பெரும் முதலீட்டாளர்களுக்குப் பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்கள் அதிகளவில் பலன் அளிக்கிறது. ஆனாலும் பிட்காயின் உட்பட முன்னணி நாணயங்கள் தினமும் அதிகளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.
பிட்காயின் விலை
இதனால் இதன் மதிப்பைக் கணிப்பது கடினமாக உள்ளது, அதைவிடவும் நீண்ட கால அடிப்படையில் இதன் எதிர்காலம் என்பது அனைவருக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது. இன்று ஒரு பிட்காயின் விலை 3.99 சதவீதம் அதிகரித்து 57,328.18 டாலராக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications