சென்னை: பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி, JSW சிமெண்ட் நிறுவனத்தின் ரூ.4,000 கோடி மதிப்புள்ள ஐபிஓ திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் நிதி திரட்டும் நோக்கில் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்திய சந்தை மிகவும் சாதகமாக இருப்பது தான்.
மாசம் 10 பெரிய ஐபிஓ வந்தாலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயாராக உள்ளனர், ஆனால் ஐபிஓ வெளியிடும் அனைத்து நிறுவனங்களும் இத்தகைய சாதகமான சூழ்நிலை உருவாகிறதா என்றால் நிச்சயம் இல்லை. சிறப்பான நிதி நிலை உடன் தொடர்ந்து வளர்ச்சி அடையும் வர்த்தகத்தைக் கொண்டு இருக்கும் நிறுவனங்களுக்கு ஐபிஓ சிறப்பான தேர்வாக உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், சிமெண்ட் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. இதேபோல் பெரிய சிமெண்ட் நிறுவனங்கள் சிறிய சிமெண்ட் நிறுவனங்களை வாங்குவது அதிகரித்துள்ளது. இதனால் சிமெண்ட் துறைக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் காரணத்தால் JSW சிமெண்ட் ஐபிஓ வெளியிட திட்டமிட்டது, ஆனால் இதற்கு செக் வைத்துள்ளது செபி.
SEBI தனது இணையதளத்தில் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், எவ்விதமான காரணங்களையும் குறிப்பிடாமல், "ஐபிஓ வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தது. பல துறையில் இயங்கி வரும் JSW குரூப்-ன் முக்கிய வர்த்தக பிரிவாக இயங்கி வரும் JSW சிமெண்ட், ஆகஸ்ட் 16 அன்று செபி அமைப்பிடம் ஐபிஓ வெளியிடுவதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்தது.
JSW சிமெண்ட் செபி-யிடம் தாக்கல் செய்த DRHP அறிக்கையின் படி, ரூ.2,000 கோடி மதிப்புள்ள புதிய பங்கு வெளியீடு மற்றும் ரூ.2,000 கோடி மதிப்புள்ள முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை (OFS) ஆகியவற்றின் மூலம் சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ வெளியிட தயாரானது JSW சிமெண்ட்.
இந்த ஐபிஓ திட்டத்தில் OFS-இன் கீழ், ஏபி ஏசியா ஆப்பர்சுனிட்டீஸ் ஹோல்டிங்க்ஸ், மற்றும் சினர்ஜி மெட்டல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்க்ஸ் ஆகியவை தலா ரூ.937.5 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்யும். இந்தியன் ஸ்டேட் வங்கி (SBI) ரூ.125 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்யும்.
JSW சிமெண்ட் நிறுவனம் இந்த ஐபிஓ மூலம் திரட்டும் நிதியில் ரூ.800 கோடி, ராஜஸ்தான் மாநிலத்தில் நாகௌரில் அமைக்கப்பட்டு உள்ள புதிய ஒருங்கிணைந்த சிமெண்ட் தொழிற்சாலை நிறுவுவதற்கு பயன்படுத்தப்படும். இதோடு ரூ.720 கோடி கடன் திருப்பிச் செலுத்துவதற்கும், மீதமுள்ள நிதி பொது நிறுவன நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும்.
வருடம் சுமார் 19 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட JSW சிமெண்ட், வருடத்திற்கு 60 மில்லியன் டன் உற்பத்தி திறனை அடைய இலக்கு வைத்துள்ளது. JSW சிமெண்ட் தற்போது கர்நாடகாவின் விஜயநகரம், ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால், மேற்கு வங்காளத்தின் சால்போனி, ஒடிசாவின் ஜஜ்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் டோல்வி ஆகிய இடங்களில் சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலையை வைத்துள்ளது.
கூடுதலாக, JSW சிமெண்ட் தனது துணை நிறுவனமான சிவா சிமெண்ட் மூலம் ஒடிசாவில் ஒரு கிளின்கர் தொழிற்சாலையை இயக்குகிறது. JSW Group, எஃகு, ஆற்றல், கடல்சார் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, B2B மின் வணிகம், ரியல் எஸ்டேட், பெயிண்ட், விளையாட்டு மற்றும் வென்சர் கேப்பிடல் போன்ற பல துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications