புவனேஸ்வர்: 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் தங்களது மின்சார வாகன உற்பத்தி ஆலை அமைக்கும் திட்டத்தை ஒடிசாவிலிருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றப்படுவதாக வெளியான செய்தி உண்மை இல்லை என ஜேஎஸ்டபிள்யூ குழுமம் விளக்கம் தந்துள்ளது.
சஜன் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ஒடிசா மாநிலத்தில் 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலைகளை அமைக்க இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் இது தொடர்பாக ஒடிசா அரசுக்கும் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால் திடீரென இந்த ஆலையை ஒடிசாவில் இருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தில் மூத்த அதிகாரி ரஞ்சன் நாயக் ஒடிசாவில் இருந்து இந்த திட்டத்தை மகாராஷ்டிராவுக்கு மாற்றும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் இந்த திட்டம் ஒடிசாவில் தான் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஒடிசா மாநில தொழில்துறை அமைச்சரான சம்பத் சந்திரா ஒடிசாவிலிருந்து மின்சார வாகன உற்பத்தி ஆலையை மகாராஷ்டிராவுக்கு இடமாற்றம் செய்வதாக ஜேஎஸ்டபிள்யூ இதுவரை தங்களிடம் எந்த தகவலையும் வழங்கவில்லை எனக் கூறியுள்ளார்.
தற்போதைக்கு பல்வேறு முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கும் அவர்களுக்கு உரிய நிலங்களை கையப் படுத்தி வழங்குவதற்கும் சற்றே தாமதம் ஏற்படுகிறது என்பதை தெரிவித்த அவர், ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தொடர்ந்து இந்த திட்டத்தை ஒடிசாவிலேயே செயல்படுத்த வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும் இது தொடர்பாக இந்த நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக ஜூலை மாதத்தில் மகாராஷ்டிரா அரசு ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ கிரீன் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் மின்சார மற்றும் ஹைபிரிட் கார்களையும், லித்தியம் பேட்டரி தயாரிக்கும் ஆலைகளையும் மகாராஷ்டிராவில் நிறுவுவதற்கு அனுமதி அளித்தது.
கிட்டத்தட்ட 42,000 கோடி மதிப்பில் இந்த ஆலைகள் அமையும் என சொல்லப்பட்டது. இதன் காரணமாகவே ஒடிசாவில் இருந்த அமைய இருந்த ஆலையை ஜேஎஸ்டபிள்யூ மகாராஷ்டிராவுக்கு மாற்ற இருப்பதாக தகவல் வெளியானது.
மேலும் ஆலை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டு ஆறு மாத காலம் 7 மாதங்கள் முடிவடைந்தும் ஒடிசா மாநில அரசு இந்த நிறுவனத்திற்கு தேவையான நிலத்தை இதுவரை ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது உள்ளிட்டவை காரணமாக இது போன்ற தகவல் வலம் வந்தது.
இந்த நிலையில்தான் ஆலையை இடமாற்றும் எண்ணம் இல்லை என ஜேஎஸ்டபிள்யூ குழுமம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே அறிவித்த படி ஒடிசாவின் கட்டாக்கில் 25,000 கோடி முதலீட்டில் மின்சார வாகன உற்பத்தி ஆலையும், பாராதிப்பில் 15,000 கோடி முதலீட்டில் பேட்டரி உற்பத்தி ஆலையும் அமைய இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications