இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் உடன் நேருக்கு நேர் மோத வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் JSW குழுமம் பெரும் தொகையை முதலீடு செய்யத் தயாராகியுள்ளது.
JSW குரூப் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் நீண்ட காலமாக ஆட்டோமொபைல் துறையில் இறங்க வேண்டும் எனத் திட்டமிட்டுப் பல தொழிற்சாலைகளைக் கைப்பற்ற முயற்சி செய்து தோல்வி அடைந்தார். ஆனால் இந்த முயற்சியை சஜ்ஜன் ஜிண்டால் விடாமல் செய்தார்.

சமீபத்தில் தான் JSW குழுமம் மற்றும் சீனாவின் SAIC மோட்டார் உடன் 2023 நவம்பரில் இந்தியாவில் ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கியது. இக்கூட்டணி இந்தியாவில் MG மோட்டார்ஸ் கீழ் கிரீன் மொபிலிட்டி மற்றும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு, விற்பனையில் கவனம் செலுத்த ஒப்பந்தம் செய்தது.
JSW குரூப் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் தமிழ்நாட்டில் தான் தொழிற்சாலையை அமைக்க முயற்சி செய்தார், இதற்காகச் சென்னை மறைமலைநகர் போர்டு தொழிற்சாலையைக் கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால் போர்ட் மீண்டும் தனது புதிய மாடல் காரை சென்னை தொழிற்சாலை வாயிலாக இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது.
இந்த நிலையில் JSW குரூப் தற்போது இந்தியாவின் கடலோர மாநிலமான ஒடிசா-வில் எலக்ட்ரிக் வாகன (EV) உற்பத்தித் திட்டங்களக்காகச் சுமார் 4.81 பில்லியன் டாலர் கிட்டத்தட்ட 40000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
2023ஆம் ஆண்டு இந்தியாவின் கார் விற்பனையில் எலக்ட்ரிக் மாடல்கள் வெறும் 2% பங்கீட்டை மட்டுமே கொண்டு உள்ளது. இத்துறையில் டாடா மோட்டார்ஸ் ஆதிக்கம் செலுத்துகிறது, ஆனால் மத்திய அரசு 2030க்குள் எலக்ட்ரிக் கார் 30% பங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இதனால் JSW குழுமத்திற்கும், MG மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்புகள் உள்ளது.
தற்போது JSW குழுமம் அறிவித்துள்ள 40000 கோடி ரூபாய் திட்டத்தின் கீழ் முதல் இரண்டு கட்டத்தில் 25000 கோடி ரூபாய் முதலீட்டில் EV பேட்டரி உற்பத்தி ஆலை மற்றும் EV உதிரிபாகங்கள் ஆலையில் அமைக்க உள்ளதாகத் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
3வது கட்டமான 15000 கோடி ரூபாய் முதலீட்டில் EV உதிரிபாகங்கள் காம்பிளெக்ஸ்-ஐ கட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 40000 கோடி ரூபாய் தற்போது ஒடிசா-வுக்குச் சென்றுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications