திருப்பதி செல்பவர்கள் லட்டு பிரசாதம் இல்லாமல் மலை இறங்கமாட்டார்கள். அந்த வகையில் திருப்பதி பெருமாள் கோயிலில் வழங்கப்படும் லட்டு நமது வாழ்க்கையில் பின்னிப்பிணைந்துள்ளது. இப்படி திருப்பதி என்றாலே லட்டு என்பதை உருவாக்கியவர் யார் என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
திருப்பதி பெருமாள் கோயிலில் லட்டு பிரசாதமாக வழங்கும் பழக்கம் 300 ஆண்டுகளுக்கு முன்னர் 1715 இல் இருந்து தொடங்கப்பட்டது. இதற்காக திருப்பதி தேவஸ்தானத்தில் பிரத்தியேக சமயலறை கூட நிறுவப்பட்டுள்ளது. சிறந்த திறன் கொண்ட நபர்கள் மட்டுமே இந்த லட்டு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.

ஒரு நாளில் முதலில் தயாரிக்கப்படும் லட்டு பெருமாளுக்கு வைத்து படைக்கப்படுகிறது. இதன் பிறகுதான் பக்தர்களுக்கு அது விநியோகம் செய்யப்படும். திருப்பதிக்கு செல்லக்கூடிய ஒவ்வொரு பக்தர்களும் ஒரு லட்டினை இலவசமாகவும் பின்னர் 50 ரூபாய் கொடுத்து அவர்களுக்கு தேவையான அளவு லட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம்.
2015 ஆம் ஆண்டு வேர்ல்ட் வைடு என்ற இதழ் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினம் தோறும் ஒரு டன் கடலை மாவு, 10 டன் சர்க்கரை, 700 கிலோ கிராம் முந்திரி, 150 கிலோ கிராம் ஏலக்காய் ,500 லிட்டர் நெய் ,500 கிலோ சர்க்கரைப்பாகு, 540 கிலோ திராட்சை ஆகியவற்றை கொண்டு சுமார் மூன்று லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு லட்டினையும் தயாரிப்பதற்கு 40 ரூபாய் செலவாகிறது.
இந்த பக்திமனம் நிறைந்த லட்டினை உருவாக்கியதன் பின்னணியில் இருப்பவர் கல்யாணம் ஐயங்கார். அவர்தான் திருப்பதி தேவஸ்தானத்திற்கு என்றே பிரத்தியேகமான ருசி கொண்ட லட்டுவை தயாரித்தார். பின்னாளில் அவரது மகன், சகோதரர்கள் என பாரம்பரியமாக அவரது குடும்பமே இந்த லட்டு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தது.
2001 ஆம் ஆண்டில் இருந்து தான் திருப்பதி திருமலை தேவஸ்தான ஊழியர்கள் லட்டு தயாரிப்பில் ஈடுபட தொடங்கினர். லட்டுக்கான டிமாண்ட் அதிகரித்ததே இதற்கு காரணம். அதற்கு முன்பு வரை கல்யாணம் ஐயங்கார் குடும்பம் மட்டுமே இதனை மேற்கொண்டது.
கல்யாணம் ஐயங்கார் என்பவர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாச ராகவன் என பெயர் கொண்டவர். இவர் பூதேரி என்ற கிராமத்தில் பிறந்தவர். பின்னாலில் இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலேயே தன் குடும்பத்தினருடன் தங்கி கோயிலுக்கு சேவையாற்ற தொடங்கினார்.
ஒருநாள் அதிக செல்வ வளம் கொண்ட ஒரு நபர் திருமலையில் தன்னுடைய கோரிக்கையை கடவுள் நிறைவேற்றினால் லட்டு தயாரித்து பெருமாளின் திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்குவதாக வேண்டிக் கொண்டார். அப்படி அவருடைய வேண்டுதல் நிறைவேறியதை எடுத்து கல்யாணம் ஐயங்கார் அவற்றை தயாரித்து வழங்கியதாக தெரிகிறது.
இப்படி பல பணக்காரர்களும் மிராசுதாரர்களும் திருப்பதி கோயிலில் தங்கள் வேண்டுதலை முன்வைத்து லட்டு பிரசாதமாக வழங்க தொடங்கினர். இப்படித்தான் லட்டு பிரசாதம் இங்கு புகழ் பெற்றது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் மூன்று வகையான லட்டுக்கள் வழங்கப்படுகின்றன.
ஆஸ்தானம் லட்டு, கல்யாண உட்ஸ்வம் லட்டு , ப்ரோகதம் லட்டு. இதில் ஆஸ்தானம் லட்டு என்பது சிறப்பு பண்டிகை நாட்களில் தயாரிக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. பிரதமர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் , பிற நாடுகளை சேர்ந்த தலைவர்கள் ஆகியோருக்கு இந்த ஆஸ்தானம் லட்டு வழங்கப்படுகிறது. இது பொதுவாக 750 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
கல்யாண உட்ஸ்வம் லட்டு என்பது கல்யாண உட்ஸ்வ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ப்ரோகதம் லட்டு அன்றாடம் கோயிலுக்கு வரும் வழக்கமான பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது .
இப்படி பயபக்தியுடன் பெருமாள் பக்தர்கள் வாங்கி செல்லும் லட்டு பிரசாதத்தில் பன்றி கொழுப்பு கொண்டு தயாரிக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் கொள்முதல் செய்யப்படும் நிறுவனம் மாற்றப்பட்டதே இதன் பின்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications