சென்னை: இன்று காலை மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்தானதில் பல பயணிகள் உயிரிழந்துள்ளனர், இந்த விபத்து ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் ரயில் பயணிகள் தங்களை இந்திய ரயில்வே துறை அளிக்கும் காப்பீடு மூலம் பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பயணிகளுக்காகப் பயணக் காப்பீடு திட்டத்தை வழங்குகிறது. இது பயணத்தின் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் காயங்களுக்கு நிதி பாதுகாப்பு அளிக்கிறது. இந்த காப்பீடு பற்றி முழுமையாக தெரிந்துகொள்வது அவசியம்.

யார் ரயில் பயணக் காப்பீட்டு திட்டத்திற்குத் தகுதியானவர்கள்?: இந்திய குடிமக்கள் மட்டுமே ஐஆர்சிடிசி மூலம் அளிக்கப்படும் இந்த சிறப்பு ரயில் பயணக் காப்பீடு பெற தகுதியுடையவர்கள் ஆவர். இந்த காப்பீடு அனைத்து வகுப்பு ரயில் பயணங்களுக்கும் பொருந்தும் என்றாலும், இது முழுக்க முழுக்க விருப்பத்தேர்வாகும். ரயில் பயணிகள் விருப்பம் இருப்பின் அதை வாங்கலாம் அல்லது மறுத்துவிடலாம், இதற்கான ஆப்ஷன் டிக்கெட் புக் செய்யப்படும் போது அளிக்கப்படும்.
ரயில் பயணக் காப்பீடு பெறுவது எப்படி?: www.irctc.co.in என்ற இணையதளத்தில் உள்ள NGeT இணையதள ஆப் (website application) அல்லது ஐஆர்சிடிசி மொபைல் ஆப் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் போது, ரயில் பயணக் காப்பீடு பெற விருப்பப்படும் பயணிகள், காப்பீடுக்கான தேர்வு பெட்டியைக் (checkbox) டிக் செய்ய வேண்டும்.
ரயில் பயணக் காப்பீடு பிரீமியம்: ஐஆர்சிடிசி பயணக் காப்பீடுக்கான ப்ரீமியம் மிகக் குறைவான தொகையே. ஒரு ரயில் பயணிக்கு வெறும் ரூ.0.35 (வரிகள் உட்பட) மட்டுமே. இந்த பிரீமியம் தானாகவே கணக்கிடப்பட்டு, மொத்த டிக்கெட் கட்டணத்துடன் சேர்க்கப்படும்.
ரயில் பயணக் காப்பீடு வழங்கும் நன்மைகள்: இந்தக் காப்பீட்டு திட்டம், ரயில் விபத்துகள் அல்லது எதிர்பாராத சம்பவங்களால் ஏற்படும் மரணம், நிரந்தர முழு உடல் ஊனம், நிரந்தர பகுதி உடல் ஊனம், மற்றும் மருத்துவமனை செலவுகளுக்குக் காப்பீடு வழங்குகிறது.
ரயில் பயணக் காப்பீட்டின் காலம்: இந்திய ரயில்வே துறை அளிக்கும் 0.35 பைசா மதிப்பிலான காப்பீடு, ரயில் புறப்படும் நேரத்திலிருந்து டிக்கெட் புக்கிங் செய்யப்பட்ட இடத்திற்கு சென்றடையும் வரையிலான பயண நேரம் வரையில் தான் இந்த காப்பீடு செல்லுபடியாகும்.
ரயில் பயணக் காப்பீடு கிளைம் செய்யும் முறை: காப்பீடு செய்யப்பட்ட பயணி அல்லது அவரது நாமினி ஆகியோரில் யாரேனும் ஒருவர் காப்பீடு சான்றிதழ், மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஆதார் ஆவணங்கள் போன்ற தேவையான ஆவணங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் ( ரயில் பயணக் பாலிசியில் இதுகுறித்த விபரம் இருக்கும்) சமர்ப்பித்து கிளைம் செய்யலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications