டெல்லி: தலைநகர் டெல்லியில் வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டிருக்கும் நிலையில் விலையை குறைக்கும் நடவடிக்கையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்கு வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் நாட்டில் அதிகம் வெங்காயம் விளையும் பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கி இருப்பு வைத்துள்ளது.
தற்போது தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் கொள்முதல் செய்த வெங்காயத்தை, தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு கொண்டு செல்ல அரசு ரயில்வேயின் உதவியை நாடியுள்ளது.

இதன் முன்முயற்சியால் 1600 மெட்ரிக் டன் வெங்காயம் ரயில்கள் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து டெல்லிக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. 20ஆம் தேதி இந்த ரயிலானது டெல்லி ரயில் நிலையத்தை வந்து அடையும் என மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரயிலில் 1600 டன் வெங்காயம் நாசிக்கிலிருந்து ”காந்தா விரைவு ரயில்” மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த ரயில் 20ஆம் தேதி டெல்லி வந்தடையும் என்றும் கூறியுள்ளார்.
இந்த வெங்காயமானது டெல்லியில் விற்பனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு போதுமான அளவு வெங்காயம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என கூறியுள்ளார்.
மேலும் முதன்முறையாக ரயில் ரேக்குகள் மூலம் அதிகமான அளவில் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது என்றும் இதே வெங்காயத்தை சாலை மார்க்கமாக கொண்டு வரும்போது 84 லட்சம் ரூபாய் செலவாகும் ஆனால் ரயில் மூலம் கொண்டு வரும்போது 70 லட்சம் ரூபாய் செலவாகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த வெங்காயமானது டெல்லியில் மானிய விலையில் ஒரு கிலோ 35 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படும் என அவர் கூறுகிறார்.
மேலும் வாரணாசி,அசாம், நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ரயில்கள் மூலம் வெங்காயத்தை கொண்டு செல்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 5 முதல் கிலோவுக்கு 35 ரூபாய் என்ற விலையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய விற்பனை நிலையங்கள் வழியாக அரசு வெங்காயத்தை விற்பனை செய்து வருகிறது.
இதுவரை சுமார் 92,000 மெட்ரிக் டன் வெங்காயம் நாசிக் மற்றும் பிற கொள்முதல் மையங்களில் இருந்து சாலை மார்க்கமாக லாரிகளில் நுகர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது ரயில்கள் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதால் எளிமையாக இதனை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications