சென்னையில் கடந்த சில மாதத்தில் பல அமெரிக்க நிறுவனங்கள் தனது அலுவலகத்தைத் துவங்கி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கேபிடஸ் என்னும் நிறுவனம் சென்னையில் முதல் இந்திய அலுவலகத்தைத் துவங்கியுள்ளது.
கேபிடஸ்
அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு நிதியுதவி வழங்கும் முன்னணி நிறுவனமான கேபிடஸ், இன்று சென்னையில் தனது அலுவலகத்தைத் திறந்துள்ளது மூலம் இந்தியாவில் அதன் செயல்பாடுகளையும் சேவைகளையும் விரிவுபடுத்து உள்ளதாக அறிவித்து உள்ளது.
இந்திய விரிவாக்கம்
கேபிடஸ் நிறுவனத்தின் வளர்ச்சியின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விரிவாக்கம் வருகிறது. இந்திய விரிவாக்கத்தின் மூலம் இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதுமையான நிதி சேவைகளை வழங்க உள்ளது.
சென்னை பெருங்குடி
கேபிடஸ் நிறுவனம் சென்னை பெருங்குடியில் உள்ள ராஜீவ் காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலையை ஒட்டி அமைந்துள்ள 7,500 சதுர அடியில் மிகப்பெரிய அலுவலகத்தை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இயக்கி வருவதாக அறிவித்துள்ளது. இந்தச் சென்னை அலுவலகத்தில் 100 ஊழியர்களுடன் திறக்கப்பட்டு உள்ளது.
முக்கியப் பணிகள்
இந்தப் பெருங்குடி அலுவலகத்தில் இருந்து விண்ணப்ப செயலாக்கம், கடன் பகுப்பாய்வு, தரவு பகுப்பாய்வு, முன் கணிப்பு மாடலிங் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதரவை இந்திய ஊழியர்கள் குழு மூலம் வழங்குகிறது.
புதிய ஊழியர்கள்
2022 ஆம் ஆண்டு முழுவதும் கேபிடஸ் நிறுவனத்தில் சிறந்த திறமையாளர்களைத் தேடி நியமிக்கும் பணிகள் தொடரும். 20 புதிய முழுநேர ஊழியர்களை இந்தியாவில் 2022 ஆண்டு இறுதிக்குள் பணியமர்த்தவும், 2023 ஆம் ஆண்டில் கூடுதலாக 30 புதிய பணியாளர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முரளி கோவிந்தராஜுலு
கபிடஸ் இந்தியாவின் வணிகத் தலைவராக முரளி கோவிந்தராஜுலு பணியாற்றுவார், இவரது தலைமையில் தான் சென்னை அலுவலகத்தை வழிநடத்தப்படும். உலகளாவிய செயல்பாடுகளை அளவிடும் விரிவான அனுபவம் முரளி கோவிந்தராஜுலு, இந்திய ஊழியர்கள் குழுவை வழிநடத்த அமெரிக்காவில் கேபிடஸ் தலைமையுடன் இணைந்து பணியாற்றுவார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications