காரைக்கால் துறைமுகத்தை கையகப்படுத்தும் பணியை முடித்துவிட்டதாக அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் (APSEZ) சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தியாவின் 2வது பெரிய கோடீஸ்வரராக இருக்கும் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் துறைமுக வர்த்தக பிரிவு தான், அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ இந்நிறுவனம் ஏற்கனவே முந்திரா துறைமுகத்தை கைப்பற்றி அதிகப்படியான வர்த்தகத்தை பார்த்து வரும் வேளையில் தற்போது தமிழ்நாட்டில் தனது துறைமுக வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
இதன் மூலம் அதானி குழுமம் தென்னிந்தியாவிலும் தனது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
காரைக்கால் துறைமுகம்
காரைக்கால் துறைமுகம் இந்தியாவின் தென் கிழக்குக் கடற்கரையில் வருடம் முழுவதும் வர்த்தகம் செய்யக்கூடிய முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) காரைக்கால் துறைமுகத்திற்கான அதானி குழுமத்தின் தீர்மானத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து தற்போது கைப்பற்றப்பட்டு உள்ளது.
NCLT அமைப்பு
NCLT அமைப்பு ஒப்புதல் அளித்த திட்டத்தின் கீழ், அதானி நிறுவனம் சுமார் 1,485 கோடி ரூபாய் அளவிலான தொகையை காரைக்கால் துறைமுகத்திற்கு கடன் அளித்த நிதி அமைப்புகள் மற்றும் வங்கிகளுக்கு அளிக்க உள்ளது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
இந்த நிலையில் காரைக்கால் துறைமுகத்திற்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்காக வரும் வாடிக்கையாளர்களுக்கான தளவாடச் செலவைக் குறைப்பதற்காக, உள்கட்டமைப்பை மேம்படுத்த அதானி போர்ட்ஸ் 1500 கோடி ரூபாய் கைபற்றல் தொகையை தாண்டி சுமார் 850 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த உள்ளதாக அதானி போர்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி கரண் அதானி தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டு இலக்கு
அடுத்த ஐந்து ஆண்டுகளில் காரைக்கால் துறைமுகத்தின் திறனை இரட்டிப்பாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம், மேலும் அதை multipurpose துறைமுகமாக மாற்றுவதற்கு கொள்கலன் முனையத்தையும் புதிதாக சேர்க்க உள்ளோம் என்றும் கரண் அதானி தெரிவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
கரண் அதானி
கரண் அதானி தலைமை வகிக்கும் அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ இந்தியாவில் மொத்தம் 14 துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் இயக்குகிறது. இதில் புதிதாக கைப்பற்றியுள்ள காரைக்கால் துறைமுகம் 2022-23 ஆம் நிதியாண்டில் 10 மில்லியன் டன் சரக்குகளை நிர்வகித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications