கர்நாலா வங்கி உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கி வரும் கர்நாலா நகரி சஹாகாரி வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இவ்வங்கியில் வாடிக்கையாளர்களின் டெப்பாசிட் பணத்தைத் திருப்பிக் கொடுக்கக் கூடப் போதிய பணம் இல்லாத காரணத்தால் கர்நாலா நகரி சஹாகாரி வங்கி தனது சேவைகளைத் தொடர உரிமத்தை ரத்து செய்து தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

 

வெள்ளிக்கிழமை முதல் வர்த்தகம் செய்வதிலிருந்து விலகியுள்ள கர்நாலா நகரி சஹாகாரி வங்கியில் டெப்பாசிட் செய்துள்ள 95 சதவீதம் பேருக்கு DICGC அமைப்பின் இன்சூரன்ஸ் மூலம் 5 லட்சம் வரையிலான தொகை டெப்பாசிட் செய்துள்ளவர்கள் அனைவருக்கும் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 
கர்நாலா வங்கி உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

ஒரு வங்கிக்கு DICGC அமைப்பின் இன்சூரன்ஸ் இருக்கும் பட்சத்தில் டெப்பாசிட் செய்துள்ளவர்கள் அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும். அந்த வகையில் தான் தற்போது கர்நாலா நகரி சஹாகாரி வங்கியில் டெப்பாசிட் செய்துள்ளவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப் போதுமான பணம் இல்லாத போதும் 95 சதவீதம் பேர் முழுமையான பணத்தைப் பெறுகின்றனர்.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதனால் நிதிநிலை மோசமாக இருக்கும் பல வங்கிகள் அடுத்தடுத்து சிக்கி வருகிறது.

1:5 பங்குகளாகப் பிரியும் IRCTC.. முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..? 1:5 பங்குகளாகப் பிரியும் IRCTC.. முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Karnala Nagari Sahakari Bank licence cancelled by RBI for inadequate capital

Karnala Nagari Sahakari Bank licence cancelled by RBI for inadequate capital
Story first published: Saturday, August 14, 2021, 18:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X