கர்நாடக மாநிலம் முழுவதும் திரையரங்குகளில் டிக்கெட் விலையை குறைத்து மக்கள் திரைப்படத்தை அதிகம் பார்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் இன்று அம்மாநில பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு, 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மூலம் இந்தியாவில் 16 முறை மாநில பட்ஜெட்-ஐ தாக்கல் செய்த பெருமையையும், சாதனையையும் பெற்றுள்ளார்.

இந்த பட்ஜெட்டை பலரும் பாராட்டும் வகையில் அம்மாநிலத்தில் இருக்கும் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விலையை அதிகபட்சமாக ரூ.200 ஆக நிர்ணயக்கும் கொள்கையை கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இது மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கும் பொருந்தும் என்பது தான்.
சமீப காலங்களில் சினிமா டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்து, சாதாரண மக்கள் திரைப்படம் பார்ப்பதை பெரிய அளவில் குறைந்துள்ளது, இதனால் மக்கள் அதிகளவில் OTT பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, அனைத்து மக்களும் திரைப்படங்களை பார்த்து மகிழ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சித்தராமையாவின் முந்தைய ஆட்சியிலும் இதேபோன்ற கட்டண குறைப்பை கொண்டுவரப்பட்டது, ஆனால் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வென்றனர். இதனால், இது அமல்படுத்த முடியாமல் போனது.
தற்போதைய சித்தராமையா அரசு, பொதுமக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த கொள்கையை மீண்டும் கொண்டு வந்துள்ளது. பெங்களுரில் குடும்பமாக 4 பேர் படம் பார்க்க வேண்டும் என்றால் 2500 முதல் 3500 ரூபாய் வரையில் செலவாகும். தற்போது அறிவித்துள்ள கட்டண குறைப்பு மூலம் 1000 முதல் 1500 ரூபாய் இருந்தாலே போதுமானது.
மேலும் இந்த பட்ஜெட்டில் கன்னட திரைப்பட துறையை வலுப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை மாநில அரசு இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. திரைப்பட தயாரிப்பை ஒரு அங்கீகரிப்பட்ட தொழிலாக அறிவிப்பது மூலம் முதலீடுகளை ஈர்ப்பது எளிதாகி இத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
இதேபோல் கர்நாடக அரசு சொந்தமாக ஓடிடி (OTT) தளத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த தளம், கன்னட திரைப்படங்களை மக்கள் மத்தியில் அதிகம் கொண்டு சென்று, டிஜிட்டல் சந்தையில் போட்டியை சமாளிக்கும் வகையில் எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், மைசூரில் உலகத்தரம் வாய்ந்த திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து, 150 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications