பெங்களூரு: கர்நாடக அரசு பெங்களூருக்கு அருகிலேயே KWIN City என்ற அதிநவீன புதிய நகரத்துக்கான அடிக்கல் நாட்டியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் இணைந்து இந்த நகரத்துக்கான திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்.
Knowledge, Wellbeing, and Innovation (KWIN) என்ற கருப்பொருளின் அடிப்படையில் பெங்களூருக்கு அருகே KWIN நகர் அமைகிறது. பெங்களூருக்கு நிகரான வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை கொண்ட ஒரு நகரமாக KWIN சிட்டி உருவாக இருக்கிறது. இதற்காக தொட்டாஸ்பேட் மற்றும் தொட்டாபெல்லாபூர் பகுதியில் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நகரம் அமைக்கப்படுகிறது.

பெங்களூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலேயே இது அமைகிறது. இந்த நகரத்தை பொருத்தவரை உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள், ஆய்வு மையங்கள் மற்றும் சர்வதேச மருத்துவமனைகள் கொண்ட நவீன மற்றும் மக்களுக்கு தேவையான அனைத்தும் கொண்ட ஒரு நகரமாக இருக்கும் என கர்நாடகா அரசு கூறுகிறது.
இந்தத் திட்டத்தினை கர்நாடக மாநிலத்தின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தலைமை தாங்கி நடத்துகிறது. இது பெங்களூருக்கு அருகிலேயே அதே வேளையில் கெம்பக்கவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரம் பயண தூரத்திலேயே இருப்பதால் பல்வேறு முதலீட்டாளர்களும் இங்கே முதலீடு செய்ய முன்வருவார்கள் என கர்நாடகா அரசு கருதுகிறது.
KWIN நகரம் குறித்து அறிவிப்பு வெளியான உடனேயே தொட்டபெல்லாபூர் பகுதியில் ரியல் எஸ்டேட் மதிப்புகள் உயர்ந்துவிட்டன.
கர்நாடக அமைச்சர் எம்.பி பாட்டில், KWIN நகரம் மாநில ஜிடிபிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிக்க போகிறது என தெரிவித்திதுள்ளார்.
தற்போது மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் கர்நாடகாவை சேர்ந்த மக்களுக்கு வேலையை உருவாக்குவதற்காகவும் பெங்களூருக்கு அருகிலேயே இப்படி ஒரு புதிய நகரத்தை அமைப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நகரம் அமைந்துவிட்டால் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும் 80 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கர்நாடக அரசு தெரிவிக்கிறது.
5 லட்சம் மக்கள் குடியிருக்கும் வகையில் இந்த நகரம் அமைக்கப்படும் என்றும் 465 ஏக்கர் பரப்பளவில் சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நகரத்திற்கு தேவையான பெருபான்மையான மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மூலமே தயாரிக்கப்பட உள்ளது.
மேலும் நவீன மழை நீர் சேகரிப்பு முறையின் அடிப்படையில் இந்த நகரத்துக்கு 50 சதவீத தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட இருக்கிறது. செமி கண்டக்டர், வாகனங்கள் ,ஏரோஸ்பேஸ் பாதுகாப்பு , விண்வெளி தொழில்நுட்பம் , மருந்து உள்ளிட்ட துறைகளுக்கான ஒரு நகரமாக KWIN சிட்டி இருக்கும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications