கர்நாடக மாநில அரசு 35 லட்சம் ரூபாய் முதல் 45 லட்சம் ரூபாய் வரையிலான வீடுகளுக்கு முத்திரைத் தாள். கட்டணத்தை 3% ஆகக் குறைத்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பெருத்த அடி வாங்கிய துறைகளில் ரியல் எஸ்டேட் துறையும் ஒன்று. குறிப்பாக பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை மோசமான சரிவினைக் கண்டது.
ஏனெனில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அரசு நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்திய நிலையில், பலரும் தங்கள் வருவாய் ஆதாரங்களை இழந்தனர். பலர் வேலைகளை இழந்தனர். இதனால் வங்கிகளில் செலுத்தkகூடிய நிலுவையினை செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் அத்தியாவசியம் தவிர மற்றவற்றிற்கு செலவு செய்வதனை குறைத்தனர். இதனால் ரியல் எஸ்டேட் துறை மோசமாக வீழ்ச்சி கண்டது.
முத்திரைத் தாள் கட்டணம் குறைப்பு
இதற்கிடையில் முடங்கிபோன பொருளாதாரத்தினை மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநில தற்போது ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் விதமாகவும், வீடு விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும் முத்திரைத்தாள் கட்டணத்தினை குறைத்துள்ளது.
நீண்டநாள் கோரிக்கை
இது குறித்து கட்டுமான நிறுவனங்களும் தொடர்ந்து, ரியல் எஸ்டேட் துறையை மீட்டெடுக்க முத்திரைத் தாள் கட்டணத்தினை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பின.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் முத்திரைத்தாள் கட்டணம் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது. அதாவது ஏற்கனவே முத்திரைத்தாள் கட்டணம் 5% ஆக இருந்த நிலையில், ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை நடைபெறும் விற்பனைகளுக்கு முத்திரைத்தாள் விற்பனை 2% ஆக குறைக்கப்பட்டது.
எவ்வளவு குறைப்பு?
இதனையடுத்து இன்று கர்நாடகா மாநிலத்தில் அம்மாநில முதல்வரும் நிதித்துறை அமைச்சருமான எடியூரப்பா இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் போலவே 35 - 45 லட்சம் ரூபாய் வரையிலான வீடுகள் விற்பனைக்கான முத்திரைத்தாள் கட்டணம் 5% இருந்து 3% ஆகக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
எந்தளவுக்கு கைகொடுக்கும்?
இந்த அறிவிப்பு பலருக்கும் இதன் மூலம் கட்டுமான தொழில்களுக்கு நல்ல முன்னேற்றத்தை அளிப்பது போல் தோன்றலாம். ஆனால் அது உண்மை அல்ல, ஏனெனில் மகாராஷ்டிராவில் அனைத்து விலை உள்ள வீடுகளுக்கும் இந்த முத்திரைத்தாள் கட்டணக் குறைக்கப்பட்டது. ஆனால் பெங்களுருவில் ஒரு தரப்புக்கு மட்டும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த அறிவிப்பு எந்தளவுக்கு கைகொடுக்கும் என தெரியவில்லை என நிபுணர்கள் தரப்பில் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications