கர்நாடக அரசு சிறிய தூர பயணத்திற்கான எலக்ட்ரிக் பைக் டாக்ஸி சேவையை அனுமதி அளித்துப் புதிய பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய திட்டத்தைக் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வெளியிட்டு, டிவிட்டரில் இதுகுறித்த ஒரு பதிவையும் செய்துள்ளார்.
2019ல் பைக் டாக்ஸி சேவை அளிக்கக் கூடாது என மிகக் கடுமையான உத்தரவை கர்நாடக அரசு வெளியிட்டதை மறக்க முடியாது. ஆனால் இன்று பெரு நகரங்களில் இருக்கும் போக்குவரத்து பிரச்சனைகளை உணர்ந்து, பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு எலக்ட்ரிக் பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி அளித்துள்ளது.
கர்நாடக அரசு
கர்நாடக அரசு வெளியிட்டுள்ள புதிய எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம் 2021 கீழ் ஒரு நிறுவனமோ அல்லது தனிநபரோ எலக்ட்ரிக் பைக்குகளை
டாக்ஸி-யாகப் பயன்படுத்தப் பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.
எலக்ட்ரிக் பைக் டாக்ஸி
இதேபோல் பைக் பதிவு செய்யும் போதே பைக் டாக்ஸி எனத் தெளிவாகப் பதிவு செய்திட வேண்டும், அப்போது தான் அந்த வாகனம் எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் இத்திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இன்சூரன்ஸ் பாதுகாப்பு
மேலும் நிறுவனங்கள் பதிவு செய்யப்படும் ஈ-பைக்குகளுக்கும், ஓட்டுநர்களுக்கும் ஈ-பைக் டாக்ஸி நிறுவனங்கள் கட்டாயம் இன்சூரன்ஸ் பாதுகாப்பை அளிக்க வேண்டும் எனப் புதிய எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம் 2021-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா
இதுக்குறித்துக் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தனது டிவிட்டர் பதிவில், இன்று புதிய எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம் 2021 வெளியிடப்பட்டு உள்ளது, இப்புதிய திட்டத்தின் மூலம் நகரத்து வாழ்க்கை முறை எளிதாகும், பல வேலைவாய்ப்புகளையும், தொழில்களையும் உருவாக்க முடியும் எனக் குறிப்பிட்டு உள்ளார்.
ரேபிடோ நிறுவனம்
எலக்ட்ரிக் பைக்குக்களை பைக் டாக்ஸி ஆகப் பயன்படுத்தக் கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த ஒன்றுக்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. ரேபிடோ டெல்லியில் எலக்ட்ரிக் பைக் டாக்ஸி சேவையைக் கூட்டணி முறையில் சோதனை செய்து வெற்றிபெற்ற நிலையில், தற்போது பெங்களூரிலும் இதுபோன்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார் ரேபிடோ நிறுவனத்தின் துணை நிறுவனர் அரவிந்த் சன்கா.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications