கர்நாடக அரசு சிறிய தூர பயணத்திற்கான எலக்ட்ரிக் பைக் டாக்ஸி சேவையை அனுமதி அளித்துப் புதிய பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய திட்டத்தைக் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வெளியிட்டு, டிவிட்டரில் இதுகுறித்த ஒரு பதிவையும் செய்துள்ளார்.
2019ல் பைக் டாக்ஸி சேவை அளிக்கக் கூடாது என மிகக் கடுமையான உத்தரவை கர்நாடக அரசு வெளியிட்டதை மறக்க முடியாது. ஆனால் இன்று பெரு நகரங்களில் இருக்கும் போக்குவரத்து பிரச்சனைகளை உணர்ந்து, பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு எலக்ட்ரிக் பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி அளித்துள்ளது.
கர்நாடக அரசு
கர்நாடக அரசு வெளியிட்டுள்ள புதிய எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம் 2021 கீழ் ஒரு நிறுவனமோ அல்லது தனிநபரோ எலக்ட்ரிக் பைக்குகளை
டாக்ஸி-யாகப் பயன்படுத்தப் பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.
எலக்ட்ரிக் பைக் டாக்ஸி
இதேபோல் பைக் பதிவு செய்யும் போதே பைக் டாக்ஸி எனத் தெளிவாகப் பதிவு செய்திட வேண்டும், அப்போது தான் அந்த வாகனம் எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் இத்திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இன்சூரன்ஸ் பாதுகாப்பு
மேலும் நிறுவனங்கள் பதிவு செய்யப்படும் ஈ-பைக்குகளுக்கும், ஓட்டுநர்களுக்கும் ஈ-பைக் டாக்ஸி நிறுவனங்கள் கட்டாயம் இன்சூரன்ஸ் பாதுகாப்பை அளிக்க வேண்டும் எனப் புதிய எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம் 2021-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா
இதுக்குறித்துக் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தனது டிவிட்டர் பதிவில், இன்று புதிய எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம் 2021 வெளியிடப்பட்டு உள்ளது, இப்புதிய திட்டத்தின் மூலம் நகரத்து வாழ்க்கை முறை எளிதாகும், பல வேலைவாய்ப்புகளையும், தொழில்களையும் உருவாக்க முடியும் எனக் குறிப்பிட்டு உள்ளார்.
ரேபிடோ நிறுவனம்
எலக்ட்ரிக் பைக்குக்களை பைக் டாக்ஸி ஆகப் பயன்படுத்தக் கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த ஒன்றுக்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. ரேபிடோ டெல்லியில் எலக்ட்ரிக் பைக் டாக்ஸி சேவையைக் கூட்டணி முறையில் சோதனை செய்து வெற்றிபெற்ற நிலையில், தற்போது பெங்களூரிலும் இதுபோன்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார் ரேபிடோ நிறுவனத்தின் துணை நிறுவனர் அரவிந்த் சன்கா.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications