திருப்பூர் உடன் போட்டிப்போடும் பல்லாரி.. கர்நாடக அரசின் மாஸ்டர் பிளான்..!!

சீனா அமெரிக்கா பிரச்சனைக்கு மத்தியில் உலகளவில் மாற்று உற்பத்தி தளங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்தியா இதற்கு முதன்மையான தேர்வாக இருக்கும் வேளையில், பங்காளாதேஷ் மூலம் இந்தியாவுக்கு டெக்ஸ்டைல் துறையில் அதிகப்படியான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

இதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள கர்நாடகா அரசு பல்லாரி அருகே சஜனீராயணகோட்டையில் மிகவும் பிரத்தியேகமான முறையில் ஜீன்ஸ் பார்க்கை நிறுவ திட்டமிட்டுள்ளது. பங்களாதேஷ் நாட்டில் அரசியல் பிரச்சனை வெடித்தது முதல் அந்நாட்டின் வர்த்தகம் இன்மும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை, இதனால் பங்களாதேஷ் நாட்டில் வர்த்தகம் செய்து வந்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மாற்றி வருகிறது.

திருப்பூர் உடன் போட்டிப்போடும் பல்லாரி.. கர்நாடக அரசின் மாஸ்டர் பிளான்..!!

உலகளாவிய ஆடைத் நிறுவனங்கள் பங்களாதேஷ் அரசியல் பிரச்சனை தொடர்ந்து இந்தியாவுக்கு குறிப்பாக திருப்பூர்-க்கு அதிகப்படியான வர்த்தகத்தை மாற்றி வரும் வேளையில், கர்நாடகா-விற்கும் சில வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளது. ஏற்கனவே பல்லாரி பகுதி ஜீன்ஸ் தயாரிப்பு சார்ந்த தொழில்கள் அதிகமாக இருக்கும் வேளையில் பங்களாதேஷ் நாட்டின் வர்த்தகம் பல்லாரிக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் தான் கர்நாடக அரசு சுமார் 154 ஏக்கர் பரப்பளவில் ஜீன்ஸ் பார்க் அமைக்க திட்டமிட்டு உள்ளது. இந்த ஜீன்ஸ் பார்க்-ல் உலகளாவிய டெனிம் உற்பத்தியாளர்களிடமிருந்து கணிசமான முதலீடுகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாட மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் எம்.பி.பட்டீல், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக உறுதிப்படுத்தினார். பங்களாதேஷ் வீழ்ச்சி இந்தியாவுக்கு சாதகமாக மாறியுள்ளது. இந்த நிலையில் மாற்று உற்பத்தி தளங்களைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு இந்தியா சிறப்பான தேர்வாக உள்ளதாக தெரிவித்தார்.

இந்த மாற்றத்தை பயன்படுத்திக் கொள்ள கர்நாடக மாநிலத்தில் பல்லாரி பகுதியில் ஏற்கனவே சுமார் 500 ஜீன்ஸ் உற்பத்தி ஆலைகள் இருக்கும் வேளையில் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 154 ஏக்கர் பரப்பளவில் ஜீன்ஸ் பார்க் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இந்திய டெக்ஸ்டைல் துறையின் மதிப்பு 2030 ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் இலக்கை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வகுத்துள்ளார், இதேவேளையில் டெக்ஸ்டைல் துறையில் சுமார் 6 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

இந்திய டெக்ஸ்டைல் துறையின் ஏற்றுமதி சிறப்பாந வளர்ச்சியை அடைந்து வருகிறது. 2024 அக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்த டெக்ஸ்டைல் ஏற்றுமதி வருடாந்திர அடிப்படையில் 11.56% அதிகரித்து 1.83 பில்லியன் டாலர்களை எட்டியது. குறிப்பிடத்தக்க வகையில், ஆடை ஏற்றுமதி அதே காலகட்டத்தில் 35% வருடாந்திர வளர்ச்சியைக் கண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+