இந்தியாவின் சிலிகான் வேலி என செல்லமாக அழைக்கப்படும் பெங்களூர், பல துறையில் வேகமாக வளர்ந்தாலும் மொத்த கர்நாடகாவும் பெங்களூரை மட்டுமே நம்பி தனது பொருளாதார சக்கரத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறது. இப்படியிருக்கையில் தமிழ்நாடு, சென்னையை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதைத் தீவிரமாக நம்பிய காரணத்தால் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி என பல மாவட்டங்கள் தொடர்ந்து புதிய முதலீடுகளை ஈர்த்து மாஸ் காட்டி வருகிறது.
இந்த கட்டமைப்பு பிற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு இருக்கும் காரணத்தால், இதேபோன்ற கட்டமைப்பை தங்கள் மாநிலத்திலும் உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் களத்தில் இறங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் பாதையில் பயணிக்க கர்நாடக முடிவு செய்து 4-5 பெங்களூர் உருவாகப் போவதாகத் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில், பெங்களூர் சிலிகான் வேலி போல 4-5 பகுதிகளை உருவாக்க அரசு விரும்புகிறது என்று அம்மாநில மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பயோடெக்னாலஜி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். IT துறையின் தலையாய அமைப்பான நாஸ்காம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய கார்கே, கர்நாடகாவை முதலீட்டு இலக்காக மட்டுமல்லாமல், அறிவு மற்றும் திறன்களுக்கான இடமாகவும் உருவாக்க கர்நாடக அரசு விரும்புவதாகத் தெரிவித்தார்.
நாஸ்காம் தலைவர் டெப்ஜானி கோஷ் உடன் புதன்கிழமை நடைபெற்ற வடிவமைப்பு மற்றும் பொறியியல் மாநாடு 2024 இல் கலந்துகொண்டு பேசினார் பிரியங்க் கார்கே. கர்நாடகாவில், பெங்களூர் சிலிகான் வேலி போல 4-5 பகுதிகளை உருவாக்குவது மூலம் நாட்டிலும் கர்நாடகா மாநிலம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகளவில் புதுமைக்கான இடமாக மாறும் எனத் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து X தளத்தில் பிரியங்க் கார்கே செய்த பதிவில், கர்நாடகா உலகின் நான்காவது மிகப்பெரிய டெக்னாலஜி கிளஸ்டர் மற்றும் இந்திய அளவில் பல துறையில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது என்று தெரிவித்தார். இந்தியாவில் தொழில்நுட்ப திறமையில் மூன்றில் ஒரு பகுதியையும், 25,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும், 52 யூனிகார்ன் நிறுவனங்களையும், 47 விரைவில் யூனிகார்ன் நிலையை அடையும் நிறுவனங்களையும் கொண்டு உள்ளது என பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
இந்தியா செயற்கை நுண்ணறிவு திறன் தொழில்நுட்ப வல்லுனர்கள் மத்தியில் பரவுவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது, அமெரிக்கா மற்றும் ஜெர்மனிக்குப் பின்னால் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications