பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் புதிய மசோதாவை எதிர்த்து தொழில்துறையினரும், முன்னணி நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் விரிவான ஆலோசனை, ஆய்வு நடத்தப்படும் என கர்நாடகா அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியாங்க் கார்கே இதுக்குறித்து கூறுகையில், இந்த மசோதாவின் விதிமுறைகள் குறித்து தொழில் நிபுணர்கள் மற்றும் பிற துறைகளின் கருத்துகளைக் கேட்டு அதன் பின்னர் மட்டுமே அமல்படுத்தப்படும் என முதல்வர் சித்தராமைய்யா-விடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதனால் யாரும் பீதி அடையத் தேவையில்லை, விரிவான ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்துக்கு வருவோம் என்று அமைச்சர் பிரியாங்க் கார்கே கூறினார். மேலும் மாநில அரசின் நோக்கம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதும் அதே நேரத்தில் முதலீடுகளை ஈர்ப்பதும் முக்கியம் என்பதை ஒப்புக்கொண்டார்.
இந்த மசோதா குறித்து அமைச்சரவை குழு, தொழில் துறை அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையுடன் எந்த விவாதமும் இல்லாமல் தொழிலாளர் துறையால் முன் வைக்கப்பட்டது. எனவே, முதல்வர் அவர்களிடம் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளோம். அதன் மூலம் எவ்வாறு உள்ளூர் மக்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்பதைத் தீர்மானிக்க உள்ளோம் என்றார் அமைச்சர் பிரியாங்க் கார்கே.
இதேபோல் கர்நாடக தொழில்துறையில் முக்கிய நபர்களாக விளங்கும் கிரன் மசூம்தார் ஷா மற்றும் மோகன்தாஸ் பாய் ஆகியோர் இந்த மசோதாவை எதிர்த்துள்ள நிலையில், அரசு அவர்களிடமும் ஆலோசனை செய்ய உள்ளோம் எனவும் பிரியாங்க் கார்கே தெரிவித்தார்.
கர்நாடகா மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ள மசோதாவில், கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் இருக்கும் நிர்வாக பணியிடங்களில் 50 சதவீதமும் மற்றும் நிர்வாகம் அல்லாத பணியிடங்களில் 75 சதவீத ஊழியர்களைக் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் கன்னடர்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்கும் மசோதாவுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை அறிவித்தார். திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா X இல் பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு மசோதா குறித்து இன்போசிஸ் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரி மோகன்தாஸ் பாய் சற்று காட்டமாகவே காட்டினார். Mohandas Pai கூறுகையில் இந்த மசோதா இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறினார். இந்த மசோதா முதலில் நீக்கப்பட வேண்டும். இது ஒரு பாசிச மசோதா, இது போன்ற ஒரு மசோதாவைக் காங்கிரஸ் கொண்டு வர முடியும் என்று நம்பமுடியவில்லை என்றும்..
இந்த மசோதா படி ஒரு அரசு அதிகாரி தான் தனியார் துறையின் ஆட்சேர்ப்புக் குழுக்களில் அமர்வாரா? ஊழியர்கள் பணியில் சேரும் முன்பு மக்கள் மொழித் தேர்வை எழுத வேண்டுமா? என்ன இது என விரக்தியில் மோகன்தாஸ் பாய் கூறினார்.
More From GoodReturns

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications