பெங்களூருவில் தற்போது கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் பயணிகள் வருகையும் சரக்குகள் கையாளும் திறனும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே பெங்களூரு நகருக்கு இரண்டாவதாக ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் கர்நாடக மாநில அரசு மிக தீவிரமாக இருக்கிறது.
கர்நாடக மாநில அரசு பெங்களூரு இரண்டாவது விமான நிலைய திட்டத்துக்காக மூன்று இடங்களை தேர்வு செய்து ஆய்வு நடத்தியது. ஒன்று கனகபுரா சாலையிலும் ,மற்றொன்று தெற்கு பெங்களூருவின் ஹாரோஹல்லி பகுதியிலும் இருக்கிறது. மூன்றாவது இடம் சிக்கசொலூர் என்ற இடத்தில் உள்ளது. இந்திய விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் இந்த மூன்று இடங்களிலும் ஆய்வு செய்தனர். அப்போது சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். சுற்றுச்சூழல் தாக்கம், விமானம் ஏறி இறங்குவதில் சிக்கல் உள்ளிட்ட அனைத்தையும் கவனிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.'

இந்த சூழலில் கர்நாடக மாநில அரசு தெற்கு பெங்களூருவில் இருக்கும் இடத்தில் தான் விமான நிலையத்தை அமைக்க ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் ஓசூர் விமான நிலைய திட்டம் தான். தமிழ்நாடு பெங்களூரு எல்லையில் அமைந்திருக்கக்கூடிய ஓசூர் நகரில் சர்வதேச விமான நிலையத்தை கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது .
ஓசூர் நகரம் உற்பத்தி ரீதியாகவும் தொழில்துறை ரீதியாகவும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பெங்களுருக்கு அருகிலேயே இருப்பதன் காரணமாக ஓசூரில் விமான நிலையம் அமைப்பது ஓசூர் நகர வளர்ச்சிக்கு மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என தமிழ்நாடு அரசு கருதுகிறது. இதற்காக ஓசூர் விமான நிலைய இடம் தேர்வு, ஆய்வு உள்ளிட்ட பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறது .

ஓசூரில் விமான நிலையம் அமைந்துவிட்டால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை விட பெங்களுருவை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் அந்த விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள். ஏனென்றால் ஓசூர் விமான நிலையம் தெற்கு பெங்களூர் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு குறுகிய நேரத்தில் பயணம் செய்யும் தொலைவில் தான் இருக்கும். எனவே கெம்பக்வுடா சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லாமல் பல்வேறு பயணிகளும் ஓசூர் விமான நிலையத்தை பயன்படுத்த தொடங்குவார்கள் .
தெற்கு பெங்களூரில் செயல்படக்கூடிய பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு இந்த விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளும். இத்தகைய சூழலில் தான் கர்நாடக மாநில அரசு தெற்கு பெங்களூருவில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க திட்டமிடுகிறதாம்.
அப்படி அமைத்துவிட்டால் தெற்கு பெங்களூரு மக்களும் , நிறுவனங்களும் ஓசூர் விமான நிலையத்தை நாடாமல் பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையத்தையே பயன்படுத்துவார்கள். ஆனால் இது நடைமுறையில் எளிதான காரியம் இல்லை. கர்நாடகா அரசு இடத்தை தேர்வு செய்து ஆய்வு நடத்தி மத்திய அரசு, விமான போக்குவரத்து துறை ஆணையம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும். தமிழ்நாடு அரசு ஓசூர் விமான நிலைய பணிகளை வேகப்படுத்தி வரும் சூழலில் பணிகள் தொடங்கி விட்டால் கர்நாடக அரசுக்கு சிக்கல் உண்டாகும்.
More From GoodReturns

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!!

துபாயில் சிக்கிதவிக்கும் மக்களுக்கு குட்நியூஸ்.. தாய் நாட்டுக்கு கிளம்ப ரெடியாக இருங்க..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?



Click it and Unblock the Notifications