பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் எல்லாம் வேலைக்கு செல்லக்கூடிய நபர்கள் தங்களுடைய வீடுகளில் சமையல் மற்றும் பிற வேலைகளுக்காக வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு வீட்டு வேலை செய்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடக மாநில அரசு ஒரு புதிய மசோதாவை கொண்டு வர இருக்கிறது.
கர்நாடக மாநில அரசு வீட்டு வேலை செய்பவர்களுக்கான சமூக பாதுகாப்பு மற்றும் நலன் மசோதா என்ற பெயரில் ஒரு புதிய மசோதாவை கொண்டுவர முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் வீட்டு வேலைகளில் ஈடுபவர்களுக்கு ஒரு குறைந்தபட்ச சம்பளம் கிடைப்பது உறுதி செய்யப்படும் . இது தவிர அவர்களுக்கு பல்வேறு நலன்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதன்படி சமையல் வேலை செய்பவர்கள், வீட்டில் உதவியாளர்களாக வேலை செய்பவர்கள் ,ஓட்டுநர்களாக இருப்பவர்கள் , வயதானவர்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்களை பார்த்து கொள்பவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின்படி வீட்டு வேலை செய்பவர்கள் பிரிவின் கீழ் வருவார்களாம் . எனவே இவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடிய நபர்கள் அரசாங்கத்திடம் அதனை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்காக தனியாக ஒரு வாரியத்தையே கர்நாடக மாநில அரசு அமைக்க இருக்கிறது.
இந்த வாரியத்தில் வீட்டு உரிமையாளர்கள் இப்படிப்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் யாரை வேலைக்கு சேர்த்து இருக்கிறார்களோ அவர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்வது அவசியம் . இந்த நல வாரியம் இவர்களுக்கான உரிமைகளை பாதுகாப்பது முறையாக சம்பளம் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் .
இந்த வாரியத்தில் மாநில அரசு அதிகாரிகள் ,வீட்டு வேலை செய்பவர்களுக்கான யூனியனை சேர்ந்தவர்கள் மற்றும் மக்கள் நலப் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள். ஏஜென்சிகள் மற்றும் இவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடிய நபர்கள் சம்பளத்தில் ஐந்து சதவீதம் தொகையை அவர்களின் நலனுக்கான கட்டணமாக சமூக பாதுகாப்பு மற்றும் நலநிதியில் செலுத்த வேண்டியது கட்டாயம் ஆக்கப்படும்.
வீட்டு வேலை செய்யக்கூடிய நபர்களின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இந்த நிதி என்பது பயன்படுத்தப்படுமாம். மேலும் வீட்டு வேலைக்கு ஒரு நபரை நியமனம் செய்யும் போது அந்த நபருக்கும் அவ்வாறு வேலை வரக்கூடிய நபருக்கும் இடையே கட்டாயம் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். இருவரும் அதில் கையெழுத்திட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.
கர்நாடக மாநில அரசு ஏற்கனவே கிக் உள்ளிட்ட டெலிவரி பணியாளர்களுக்கான நலசட்டத்தை கொண்டு வந்தது. தற்போது வீட்டு வேலை செய்பவர்களுக்கான நல வாரியம் அமைக்கும் மசோதாவையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications