வீட்டு வேலைக்கு ஆள் வைப்பதில் கட்டுப்பாடு: கர்நாடக அரசின் புதிய மசோதா!!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் எல்லாம் வேலைக்கு செல்லக்கூடிய நபர்கள் தங்களுடைய வீடுகளில் சமையல் மற்றும் பிற வேலைகளுக்காக வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு வீட்டு வேலை செய்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடக மாநில அரசு ஒரு புதிய மசோதாவை கொண்டு வர இருக்கிறது.

கர்நாடக மாநில அரசு வீட்டு வேலை செய்பவர்களுக்கான சமூக பாதுகாப்பு மற்றும் நலன் மசோதா என்ற பெயரில் ஒரு புதிய மசோதாவை கொண்டுவர முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் வீட்டு வேலைகளில் ஈடுபவர்களுக்கு ஒரு குறைந்தபட்ச சம்பளம் கிடைப்பது உறுதி செய்யப்படும் . இது தவிர அவர்களுக்கு பல்வேறு நலன்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வீட்டு வேலைக்கு ஆள் வைப்பதில் கட்டுப்பாடு: கர்நாடக அரசின் புதிய மசோதா!!

இதன்படி சமையல் வேலை செய்பவர்கள், வீட்டில் உதவியாளர்களாக வேலை செய்பவர்கள் ,ஓட்டுநர்களாக இருப்பவர்கள் , வயதானவர்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்களை பார்த்து கொள்பவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின்படி வீட்டு வேலை செய்பவர்கள் பிரிவின் கீழ் வருவார்களாம் . எனவே இவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடிய நபர்கள் அரசாங்கத்திடம் அதனை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்காக தனியாக ஒரு வாரியத்தையே கர்நாடக மாநில அரசு அமைக்க இருக்கிறது.

இந்த வாரியத்தில் வீட்டு உரிமையாளர்கள் இப்படிப்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் யாரை வேலைக்கு சேர்த்து இருக்கிறார்களோ அவர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்வது அவசியம் . இந்த நல வாரியம் இவர்களுக்கான உரிமைகளை பாதுகாப்பது முறையாக சம்பளம் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் .

இந்த வாரியத்தில் மாநில அரசு அதிகாரிகள் ,வீட்டு வேலை செய்பவர்களுக்கான யூனியனை சேர்ந்தவர்கள் மற்றும் மக்கள் நலப் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள். ஏஜென்சிகள் மற்றும் இவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடிய நபர்கள் சம்பளத்தில் ஐந்து சதவீதம் தொகையை அவர்களின் நலனுக்கான கட்டணமாக சமூக பாதுகாப்பு மற்றும் நலநிதியில் செலுத்த வேண்டியது கட்டாயம் ஆக்கப்படும்.

வீட்டு வேலை செய்யக்கூடிய நபர்களின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இந்த நிதி என்பது பயன்படுத்தப்படுமாம். மேலும் வீட்டு வேலைக்கு ஒரு நபரை நியமனம் செய்யும் போது அந்த நபருக்கும் அவ்வாறு வேலை வரக்கூடிய நபருக்கும் இடையே கட்டாயம் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். இருவரும் அதில் கையெழுத்திட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.

கர்நாடக மாநில அரசு ஏற்கனவே கிக் உள்ளிட்ட டெலிவரி பணியாளர்களுக்கான நலசட்டத்தை கொண்டு வந்தது. தற்போது வீட்டு வேலை செய்பவர்களுக்கான நல வாரியம் அமைக்கும் மசோதாவையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+