பெங்களூர்: ஏப்ரல் மாதம், 2023 ஆம் ஆண்டில் சுமார் 38.6 லட்சம் பீர் பாக்ஸ்கள் விற்பனையாகியுள்ளன. அதே சமயம் 2024 ஆம் ஆண்டின், ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 23.5 லட்சம் பீர் பாக்ஸ்கள் விற்கப்பட்டுள்ளன. அதிக வெப்பநிலையின் காரணமாக கர்நாடகாவிலும், பெங்களூரிலும் அதிக அளவிலான பீர்பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன, என்று டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கலால் துறையில் மூத்த அதிகாரி ஒருவர் கர்நாடகா மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்ப நிலை காரணமாக, 23.5 லட்சம் பீர் பெட்டிகள் விற்பனையானது என கூறியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இந்த கோடையில் அதிக வெப்ப அலைகள் வீசும் என இம்மாதத்தின் முதல் வாரத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்ததை அடுத்து, இந்த பீர் விற்பனை அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முழுவதுமாக பதிவு செய்யப்பட்ட மொத்த பீர் விற்பனையில் கர்நாடகா மாநிலம் 61 சதவீதத்தை எட்டியுள்ளது என்று கலால் துறையிலிருந்து வந்த தரவுகள் தெரிவிக்கின்றன. கலால் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, கடந்த ஏப்ரலில், 38.6 லட்சம் பீர் பெட்டிகள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு, மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், 23.5 லட்சம் பெட்டிகள் விற்பனையாகியுள்ளன.
மேலும், இந்த தரவுகளை உன்னிப்பாக ஆராய்ந்தால், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பீர் விற்பனை உயர்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது. பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரு மாதங்களில் விற்பனையான பீர்கள் முந்தைய ஆண்டை விட அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த கோடையில், கலால் துறை விற்பனை 30% அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் பீர் தேவைக்கு ஏற்றவாறு போதுமான அளவு இருப்பு உள்ளதாக கலால் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கோடையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பலரின் விருப்பமான பானமாக பீர் இருக்கிறது. வெப்பநிலை அதிகரிக்கும் போது, பீர் நுகர்வு அதிகரிக்கிறது. ஒரே நேரத்தில் நடந்த மக்களவைத் தேர்தல்கள் இந்த பீர் விற்பனையை அதிகரித்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குளிரூட்டப்பட்ட பீர் விரும்பத்தக்க தேர்வாக இருப்பதாக கூறப்படுகிறது, இது வெப்பத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது என்று மக்கள் நம்புகின்றனர்.
ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் என்றும், மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப பகுதிகள் மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும், தென்னிந்தியாவில் அதிக வெப்பம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications