பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் சம்பளத்தை 100% உயர்த்துவதற்கு மாநில அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் தற்போது முதலமைச்சருக்கு 75,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அமைச்சர்களுக்கு மாதம்தோறும் 60,000 ரூபாயும் , எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகளுக்கு 40,000 ரூபாயும் என சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை 100 சதவீதம் உயர்த்துவதற்கு கர்நாடக மாநில அரசு அனுமதி தந்துள்ளது. இதன் மூலம் முதலமைச்சரின் சம்பளம் 1.5 லட்சம் ரூபாயாகவும், அமைச்சர்களின் சம்பளம் 1.20 லட்சம் ரூபாயாகவும் உயரும். எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்களின் சம்பளம் 80 ஆயிரம் ரூபாயாக உயரும் என சொல்லப்படுகிறது.

இந்த சம்பள உயர்வின் மூலம் இவர்களுக்கு வழங்கப்படும் டிராவல் அலவன்ஸ் ஒரு மாதத்திற்கு 2.5 லட்சத்தில் இருந்து 3.5 லட்சம் ரூபாயாக உயரும். டெலிபோன் கட்டணங்கள் மற்றும் பிற செலவினங்களுக்கு வழங்கப்படும் தொகையானது 85,000இல் இருந்து 1.10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இந்த சம்பள உயர்வு தொடர்பாக கர்நாடக மாநில அரசு இரண்டு மசோதாக்களை சட்டப்பேரவையின் இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்ய இருக்கிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்படும் போது முதலமைச்சர், எம்எல்ஏக்கள் மட்டுமில்லாமல் ஓய்வு பெற்ற எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகளுக்கான ஓய்வூதிய தொகை 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயரும். சபாநாயகரின் சம்பளம் 75,000 ரூபாயிலிருந்து 1.25 லட்சம் ரூபாயாக உயரும். இதனிடையே கர்நாடக மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.
மாநில நிதி நிலைமை சீராக இல்லாத நிலையில் 100 சதவீத சம்பள உயர்வு அவசியம் தானா என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா சாதாரண மக்களைப் போலவே தங்களுக்கும் செலவினங்கள் அதிகரிப்பதே ஊதிய உயர்வுக்கு காரணம் எனக் கூறியுள்ளார் பல்வேறு எம்எல்ஏக்களிடம் இருந்து வந்த பரிந்துரைகளை ஏற்று தான் முதலமைச்சர் இந்த முடிவினை எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
கர்நாடக மாநில அமைச்சர் எம்.பி. பாட்டில் சுதந்திரமாக அமைக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரையை ஏற்று தான் முதலமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதாக தெரிவித்துள்ளார். அதிக சம்பளம் கிடைக்கும் போது எம்எல்ஏக்கள் ஊழலில் ஈடுபடுவது குறையும் என்ற வாதத்தையும் அவர் முன் வைத்துள்ளார். இந்த சம்பள உயர்வை நாங்களாகவே முடிவு செய்து கொள்ளவில்லை, சுதந்திரமாக ஒரு கமிட்டி அமைத்து அந்த கமிட்டியின் பரிந்துரையின் பெயரில் தான் முடிவினை எடுத்தோம் என விளக்கம் தந்துள்ளார்.
இதனிடையே ஆளும் காங்கிரஸ் எம்பி ரங்கநாத் இந்த நூறு சதவீத சம்பள உயர்வு என்பதில் தனக்கு விருப்பமில்லை எனக் கூறியுள்ளார். 10 லிருந்து 20 சதவீதத்திற்கு மேல் உயர்வு இருந்தாலே போதும் என்ற கருத்தை அவர் முன் வைத்திருக்கிறார்.
More From GoodReturns

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை: முன்னோடி அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications