பெங்களூரு: கர்நாடகா அரசு தங்கள் மாநிலத்தில் ஜிசிசி மையங்களுக்கென மூன்று புதிய மாவட்டங்களை நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளது. பெங்களூருவில் 2024 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது.
பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டின் 27ஆவது பதிப்பினை தொடங்கி வைத்த முதலமைச்சர் சித்தராமய்யா பெங்களூரு ,மைசூர் மற்றும் பெலகாவி ஆகிய பகுதிகளில் ஜிசிசி மையங்களுக்கு என மூன்று புத்தாக்க மாவட்டங்கள் நிறுவப்படும் என தெரிவித்தார். இங்கே ஜிசிசி மையங்களுக்கென தொழில் பூங்காக்கள் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஜிசிசி மையங்கள் எனப்படுபவை சர்வதேச நிறுவனங்களின் இந்திய கிளைகள் ஆகும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடக மாநிலத்தில் தான் ஜிசிசி மையங்களுக்கான கொள்கை வகுக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய அவர் கர்நாடக மாநிலம் ஜிசிசி மையங்களை திறப்பதற்கு உகந்த மாநிலமாக இருக்கிறது என பெருமிதம் தெரிவித்தார்.
புதிதாக நிறுவப்பட இருக்கும் புத்தாக்க மாவட்டங்கள் அண்மையில் தொடங்கப்பட்ட கேவின் நகரின் ஒரு பகுதியாக அமையும் என கூறினார். இவை கெம்ப கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலேயே அமையும் வகையிலும் உலக தரத்தில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகள் இங்கே நடைபெறும் என்றும் சித்தராமையா கூறினார்.
இந்தியாவிலேயே ஜிசிசி மையங்களை திறப்பதற்கு விருப்பமான மாநிலமாக கர்நாடகாவும் பெங்களூரு நகரமும் இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு காரணம் இங்கே திறன் வாய்ந்த தொழில் நிபுணர்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றனர், மேலும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் நிபுணர்கள் அதிகமாக இருக்கின்றனர் என கூறினார்.
நிபுணா கர்நாடகா திட்டத்தின் மூலம் தற்போது தொழில் துறைக்கு தேவையான திறன்களை கொண்ட நபர்களை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்துவதாக கூறினார் .இதற்காக மைக்ரோசாப்ட், ஐபிஎம் ஆகிய நிறுவனங்களோடு மாநில அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறினார்.
எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் ஐடி பூங்காக்கள் என்பன உள்ளிட்ட முன் முயற்சிகள் மூலம் சர்வதேச தொழில்நுட்ப நகரமாக பெங்களூரு உருவெடுத்து இருப்பதை குறிப்பிட்ட அவர் வரும் நாட்களிலும் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நகரமாக பெங்களூரில் இருக்கும் என்றும் அதற்கேற்ற வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தித் தருகிறது என்றும் தெரிவித்தார்.
ஐடி மட்டுமில்லாமல் பயோடெக்னாலஜி, ஏரோஸ்பேஸ், அட்வான்ஸ் மேனுபேக்ச்சரிங், செயற்கை நுண்ணறிவு ,ஃபின்டெக் ஆகிய பிரிவுகளிலும் கர்நாடக மாநிலம் சிறந்து விளங்குவதாக கூறினார். 2022 முதல் 2023 ஆம் ஆண்டுகளில் கர்நாடகாவில் 3036 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன இந்தியாவிலேயே இதுதான் அதிகம் என கூறினார்.
More From GoodReturns

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை: முன்னோடி அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications