சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே.. பயன்பாடுக்கு வந்தது..!

சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் வேயில் கர்நாடகாவில் சாலை பணிகள் முழுவதும் நிறைவடைந்தது அடுத்து அந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 260 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா என மூன்று மாநிலங்கள் வழியாக பயணம் செய்கிறது. இதில் மூன்று கட்டங்களாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே.. பயன்பாடுக்கு வந்தது..!

இதில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு என ஆகிய மூன்று மாநிலங்களிலும் தனித்தனியாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் கட்டமாக கர்நாடகாவில் இருக்கும் 71 கிலோமீட்டர் தொலைவிலான சாலை பணிகள் முழுமை அடைந்து தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது .

கர்நாடகாவில் ஓஸ்கேட் முதல் மாலூர் வரை 27.1 கிலோமீட்டர், மாலூர் முதல் பங்காருபேட்டை வரை 27.1 கிலோமீட்டர். பங்காரப்பேட்டை முதல் பெத்தமங்கலம் வரை 17.5 கிலோமீட்டர் என மூன்று கட்டங்களாக இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை பணிகள் நடந்தன.

தற்போது பணிகள் முடிவடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களும் நீண்ட பயணம் செல்பவர்களும் சாலையை பயன்படுத்த தொடங்கி விட்டதாகவும் கூறியுள்ளனர். இந்த பணிகள் முன்கூட்டியே முடிவடைந்திருக்கும் ஆனால் ஓஸ்கேட் பகுதியில் இருந்த ஒரு கோயிலை இடமாற்றம் செய்வது தொடர்பாக உள்ளூர் மக்களுக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக முடிவு எட்டப்படாமல் இருந்ததே சாலை பணிகள் தாமதம் அடைந்ததற்கு காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்போதைக்கு இந்த சாலையை பயன்படுத்துவர்களிடம் எந்தவித தோல் கட்டணமும் வசூல் செய்யப்படுவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பெங்களூரு மற்றும் சென்னை இடையே பயணம் செய்யும் வகையில் இந்த எக்ஸ்பிரஸ் வே உலகதரத்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ்வே பணிகள் முடிவடைந்து விட்டால் தற்போது பெங்களூர் சென்னை இடையிலான பயண நேரம் 6 மணி நேரமாக இருக்கும் நிலையில் அது 3 மணி நேரமாக குறைந்து விடும்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திரா பகுதியில் தற்போது எக்ஸ்பிரஸ்வே அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த பணிகள் முழுமை பெற்று சாலை பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.

இந்த எக்ஸ்பிரவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பிரதான திட்டங்களில் ஒன்றாகும். இந்த சாலையை பிரதமர் நரேந்திர மோடியே மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+