பெங்களூரு: இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமாக பெங்களூரு இருக்கும் நிலையில் அதற்கு ஒரு துணை நகரத்தை உருவாக்க கர்நாடக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக கர்நாடக அரசு கூடிய விரைவில் பெங்களூருக்கு அருகே 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு புதிய நகரத்தை அமைக்க இருக்கிறது. இதன் மூலம் சுமார் 80 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ன சொல்லப்படுகிறது.
கர்நாடக அரசு KHIR (Knowledge, Health, Innovation and Research) City என்ற பெயரில் ஒரு நகரத்தை நிறுவ உள்ளது. இந்த நகரமானது பெங்களூரிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தாபாஸ்பேட் மற்றும் டொபாபலாபூர் பகுதியில் அமைகிறது. இந்த நகரத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கூடிய விரைவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் என மணிகண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக தொழில் துறை அமைச்சர் எம்.பி பாட்டில் இந்த நகரம் சார்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல் கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார் .
2000 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நகரமானது அமைய இருக்கிறது முதல் கட்டமாக 500 ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடைபெறும் என தெரியவந்துள்ளது. முதலில் ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த நகரத்துக்கான திட்ட பணிகளை தொடங்குவதாக இருந்த நிலையில் அதனை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்கு கர்நாடகா அரசு தள்ளி வைத்துள்ளது.
இந்த நகரத்தில் சுமார் 40,000 கோடி அளவிலான முதலீடுகள் கொண்டுவரப்படும் என்றும் இதன் மூலம் 80 ,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கர்நாடக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
ஆட்டோமொபைல், செமி கண்டக்டர் ,ஏரோஸ்பேஸ் மற்றும் பிற பெரிய நிறுவனங்கள் இங்கே தொழில் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெங்களூருவின் துணைநகரமாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் கர்நாடகாவின் ஜிடிபி கணிசமான அளவு உயரும் என தொழில் துறை அமைச்சர் எம்.பி பாட்டில் கூறியுள்ளார். மேலும் அனைத்து சர்வதேச நகரங்களுக்குமான ஒரு முன்மாதிரி நகரமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
நாளுக்குள் நாள் மக்கள் தொகை அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல் என பெங்களூரு நகரில் சிவில் பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. எனவே தான் பெங்களூரு அருகிலேயே ஒரு நகரத்தை உருவாக்கும் திட்டத்தை கர்நாடக அரசு முன்னெடுத்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை: முன்னோடி அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications