கோயம்புத்தூர் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய மாவட்டமாக இருக்கும் வேளையில், இந்நகரத்தை இணைக்கும் பிற நகரங்களும் அதிகப்படியான வாய்ப்புகளைப் பெற்று வருகிறது. இதில் முக்கியமாகக் கரூர் மாவட்டம் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெரும் காரணத்தால் கரூர் - கோயம்புத்தூர் மத்தியில் போக்குவரத்து பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையே பெரும் பகுதி இருவழிச் சாலையாக இருக்கும் காரணத்தால் வேகமாகப் பயணிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இரு மாவட்டங்கள் மத்தியில் பயணிகள் போக்குவரத்து மட்டும் அல்லாமல் டெக்ஸ்டைல் பொருட்கள் சார்ந்த சரக்கு போக்குவரத்தும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் வேகமான போக்குவரத்து மிகவும் அவசியமானதாக உள்ளது.

அந்த வகையில் கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பசுமை வழிச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) ஆலோசகரை நியமித்துள்ளது.
கரூர் மற்றும் கோயம்புத்தூர் வழித்தடத்தில் வாகனங்களின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாகப் பெருகிவரும் போக்குவரத்து இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, கரூர்-கோயம்புத்தூர் இடையே புதிய சாலை அமைப்பதற்கான திட்டத்தை NHAI சில ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்தது.
NHAI அதிகாரிகள், போக்குவரத்தின் அளவை அளவிடுவதற்கும் புதிய சாலையின் சீரமைப்பைக் கண்டறிவதற்கும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர். எவ்வாறாயினும், இந்தத் திட்டம் NHAI கூட்டங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தாலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால் தற்போது கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையிலான சாலை திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்கான ஆயத்த பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், DPR தயாரிக்க ஆலோசகரை NHAI நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த ஆலோசகர் கரூர் மற்றும் கோயம்புத்தூர் இடையேயான பல்வேறு பகுதிகளுக்குப் பலமுறை சென்று டிபிஆர் பணியை முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. NHAI மூத்த அதிகாரி கூறுகையில், டிபிஆர் தயாரிக்கும் பணி முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது, ஆலோசகர் ஒரு மாதத்திற்குள் அதை சமர்ப்பிக்கலாம். இதன் பின்னர் இந்த அறிக்கை NHAI தலைமையகத்திற்கு அனுப்பப்படும் என ஹிந்து பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
கரூர் டூ கோயம்புத்தூர் வழித்தடத்தில் தேவைப்படும் இடங்களில் சர்வீஸ் சாலைகள் கொண்ட ஆறு வழி நெடுஞ்சாலையாக இது இருக்கும் என்றும், நெடுஞ்சாலையின் பாதை வடிவமைக்கப்பட்டு உள்ளது. கரூர் மற்றும் கோவை இடையே தற்போதுள்ள நெடுஞ்சாலை பாதையில் ஐந்து கி.மீ. அளவில் சிறிய மாற்றம் இருக்கும், ஆனால் இது பெரிய மாற்றங்களாக இருக்காது எனவும் கூறப்படுகிறது.
இந்த 6 வழி சாலை திட்டத்திற்குத் தேவையான நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், இதற்கு 900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டம் NHAI ஒப்புதல் கிடைத்ததும் நிலம் கையகப்படுத்தும் செயல்முறை தொடங்கும். மே 2024 க்குப் பிறகு இத்திட்டத்திற்கான இறுதி ஒப்புதல் மற்றும் மதிப்பீடுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications