இந்திய வங்கி மற்றும் நிதியியல் சேவை துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் பல பரிமாணங்களில் வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
இந்தக் கடுமையான போட்டி மிகுந்த சந்தையில் ஏற்கனவே தனியார் வங்கிகள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் வேளையில் அதீத முதலீட்டு உடன் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் களமிறங்கியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் கரூர் வைஸ்யா வங்கி தான் இருக்கும் இடத்தை வலிமைப்படுத்திக்கொண்டு அடுத்தகட்டத்திற்கு நகர்வது குறித்துத் திட்டமிட்டுப் புதிதாக ஒருவரைத் தலைவராக நியமித்துள்ளது.
கரூர் வைஸ்யா வங்கி
தமிழ்நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் பகுதி நேர தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் நிர்வாகி மீனா ஹேமச்சந்திராவை நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
பகுதிநேர தலைவர்
மே மாதம், கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாகமற்ற சுயாதீன (பகுதிநேர) தலைவர் பதவிக்கு (non-executive independent) மீனா ஹேமச்சந்திரா-வின் நியமத்திற்கு வங்கி நிர்வாகம் ஒப்புதலுக்காக ரிசர்வ் வங்கிக்குப் பரிந்துரைத்தது.
ஆர்பிஐ ஒப்புதல்
இந்நிலையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை 11, 2022 தேதியிட்ட கடிதத்தின், மீனா ஹேமச்சந்திராவை வங்கியின் பகுதிநேர தலைவராக அதாவது சேர்மன் ஆக நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது எனக் கரூர் வைஸ்யா வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மீனா ஹேமச்சந்திரா
64 வயதாகும் மீனா ஹேமச்சந்திரா-வின் பதவிக்காலம், பொறுப்பேற்ற நாளிலிருந்து 3 வருட காலத்திற்கு மட்டுமே செல்லுப்படியாகும். ரிசர்வ் வங்கியின் பல்வேறு துறைகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டர் மீனா ஹேமச்சந்திரா.
ரிசர்வ் வங்கி
ஜூன் 2015 முதல் நவம்பர் 2017 வரை ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக மீனா ஹேமச்சந்திரா இருந்துள்ளார், இவரின் வருகை மூலம் கருர் வைஸ்யா வங்கியின் நிர்வாகம் மேம்படுவது மட்டும் அல்லாமல் புதிய வர்த்தகப் பிரிவில் இறங்க பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
கரூர் வைஸ்யா வங்கி பங்குகள்
கரூர் வைஸ்யா வங்கியின் பங்குகள் பிஎஸ்இ-யில் 0.63 சதவீதம் சரிந்து ரூ.47.40 ஆக வர்த்தகமானது. 2022 ஆம் ஆண்டில் இவ்வங்கியின் பங்கு விலை வெறும் 1.62 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் கடந்த 5 வருடத்தில் 59.36 சதவீதம் சரிந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications