டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையிலான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
இதன்படி, காசி விஸ்வநாதர் கோயில் மாதிரியைப் பின்பற்றி விஷ்ணுபாத் கோயில் மற்றும் மகாபோதி கோயில் ஆகியவை மேம்படுத்தப்படும் என்றார். சுற்றுலா துறை இந்திய பொருளாதாரத்தில் கணிசமான இடத்தை கொண்டுள்ளது. எனவே சுற்றுலா மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு புதிய திட்டங்களை அறிவிப்பதாக கூறினார்.

சுற்றுலா செல்வது நமது நாகரீகத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது என கூறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச சுற்றுலா மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இதன் மூலம் பொருளாதார வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.
இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்த போவதாக அறிவித்தார். பீகார் மாநிலத்தில் கயாவில் உள்ள விஷ்ணுபாத் கோயில் மற்றும் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயில் ஆகியவை ஆன்மீக சுற்றுலா மையமாக மாற்றப்படும் என தெரிவித்தார்.
காசி விஸ்வநாதர் கோயிலை முன் உதாரணமாக கொண்டு அதனடிப்படையில் இந்த இரண்டு கோயில்களும் மேம்படுத்தப்படும் என்றும் , இந்த இரண்டு கோயில்களும் மத ரீதியான முக்கியத்துவம் கொண்டவை என்றும் கூறினார். உலகத்தரம் வாய்ந்த ஆன்மீக சுற்றுலா மையமாக இவ்விரு தளங்களும் மாற்றப்படும் என உறுதி அளித்தார். பீகார் மாநிலத்தின் ராஜ்கிர் பகுதியிலும் விரிவான மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
நாளந்தா பல்கலைகழகம் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா மையமாக மாற்றப்படும் என கூறினார். இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை பீகார் மாநிலத்திற்கு சாதகமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பீகாரில் உள்ள முக்கிய கோயில்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் ராஜ்கிர் சமண கோயில் வளாகத்திற்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்களுக்கு முக்கியமான மத தளமாக ராஜ்கிர் கோயில் விளங்குகிறது. எனவே இதனை மேம்படுத்த தனி கவனம் செலுத்தப்படுகிறது என்றார்.
அதே போல ஒடிசா மாநிலத்திலும் சுற்றுலாவை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூறினார். ஒடிசாவின் அழகிய தளங்கள், கோயில்கள், பாரம்பரியமிக்க கலை பொருட்கள் ஆகியவை மிகச்சிறந்த சுற்றுலா மையமாக மாறுவதற்கான வாய்ப்பை தருகின்றன, எனவே அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications