அமெரிக்கா வெயிட்.. கௌதம் அதானி-க்கு அடுத்த அடி.. கென்யா அரசின் 2 அறிவிப்பு..!!

கென்யா நாட்டின் அதிபரான வில்லியம் ரூட்டோ திடிரென இன்று அதானி குழுமம் அந்நாட்டின் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை கைப்பற்ற மிகவும் ஆர்வத்துடன் முன்மொழிந்த கொள்முதல் செயல்முறையை (procurement process) ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்க குற்றவியல் துறை அதானி குழுமத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்த வழக்கு அதானி குழுமத்தை 360 கோணத்திலும் இன்று தாக்கியுள்ளது.

இந்த வழக்கின் காரணமாக அதானி குழும நிறுவனப் பங்குகள் 23 சதவீதம் வரையில் சரிந்துள்ளது மட்டும் அல்லாமல் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 2.25 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது, அதேபோல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 83000 கோடி ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

அமெரிக்கா வெயிட்.. கௌதம் அதானி-க்கு அடுத்த அடி.. கென்யா அரசின் 2 அறிவிப்பு..!!

கௌதம் அதானியை காலையில் அமெரிக்க புரட்டிப்புரட்டி அடித்த நிலையில், மாலையில் கென்யா புரட்டிப்போட்டு அடிக்கிறது. கென்யா நாட்டின் அதிபரான வில்லியம் ரூட்டோ தனது முதல் அறிவிப்பில் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்து அவர் அடுத்த அறிவிப்பில் மற்றொரு குண்டை தூக்கிப்போட்டார்.

வில்லியம் ரூட்டோ விமான நிலைய விரிவாக்க திட்டத்தை ரத்து செய்வதோடு மட்டுமல்லாமல், கென்ய அரசு, அதானி குழுமத்தின் துணை நிறுவனத்துடன் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான மின் பரிமாற்ற லைன்களை அமைக்க கையெழுத்திட்ட ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.

அமெரிக்க குற்றவியல் துறை, கௌதம் அதானி, அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகிகளின் மீது பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஊழல் மற்றும் மோசடி திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு 2100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து இந்திய அரசிடம் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க குற்றவியல் நீதிமன்றம், FBI, SEC குற்றம்சாட்டியுள்ளது.

அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை "அடிப்படையற்றவை" என்றும் முழுமையாக மறுப்பதாக அறிவித்தாலும், அமெரிக்க SEC பிடிவாரன்ட் விடுத்துள்ளதால் கௌதம் அதானி இனி அமெரிக்க எல்லைக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், கென்யா மின் பரிமாற்ற நிறுவனத்துடன் 30 ஆண்டு, 736 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொது-தனியார் கூட்டாணி ஒப்பந்தத்தில் கடந்த அக்டோபர் மாதம் கையெழுத்திட்டது. ஆனால் கென்ய நீதிமன்றம் அதே மாதத்தில் இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து, தற்போது ரத்து செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+