தடைகளை தகர்த்தெறிந்து எதிர்நீச்சல் போட்ட இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி!

இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு கல்வி அறிவு என்பது குறைவு தான். குறிப்பாக பெண்களை படிக்க வைப்பது, வேலைக்கு அனுப்புவது இதெல்லாம் ஒரு குற்றமாக பார்க்கப்பட்ட காலகட்டம் அது.

இப்படி பல்வேறு சமூக ரீதியான சவால்களை கடந்து தங்களுக்கு என ஒரு துறையை தேர்வு செய்து சாதனை படைத்த பெண்களும் இருக்கிறார்கள். சவால்களால் துவண்டு போகும் பெண்கள் இவர்களின் கதைகளை கேட்டால் ஊக்கம் பெற்று எதிர்நீச்சல் போட தொடங்குவர். அப்படி ஒரு சாதனை பெண்மணி தான் அன்ன ராஜம் மல்ஹோத்ரா.

தடைகளை தகர்த்தெறிந்து எதிர்நீச்சல் போட்ட இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி!

இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ்: சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி அன்னா ராஜம் . 1927-ம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்த அன்னா ராஜம், கோழிக்கோட்டில் தன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக சென்னை வந்தார்.

பெண்கள் கல்லூரி பயில வருவதெல்லாம் அதிசயமாக பார்க்கப்பட்ட சமயம் அது. ஆனால் அதை ஒரு பொருட்டாக கொள்ளாமல், மெட்ராஸ் பல்கலைகழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தார். தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வுக்கு பயின்றார்.

மக்களுக்காக பணியாற்றவே விருப்பம்: ஐ.ஏ.எஸ் தேர்வின் நேர்முகத் தேர்வின்போது, பெண்கள் பணியாற்ற ஏதுவான துறைகளைத் தேர்வு செய்யுமாறு அதிகாரிகள் அன்னா ராஜத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால், மக்களுக்காக நேரடியாகக் களமிறங்கிப் பணியாற்றவே விருப்பம் என்று கூறியுள்ளனர். மேலும், மெட்ராஸ் கேடரிலேயே தனக்குப் பதவி ஒதுக்குமாறு அவர் கேட்டு வாங்கிக்கொண்டார்.

மெட்ராஸ் மாகாணத்தில் பொறுப்பு: அன்னா ராஜம் 1950ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மெட்ராஸ் மாகாணத்திலேயே பொறுப்பேற்றார். அப்போது ராஜாஜி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். ராஜாஜி உள்ளிட்ட 7 முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர்.

பிரதமர் இந்திரா காந்தியுடன் பயணம்: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவருடன் 8 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஒரு அதிகாரியாக அன்னா ராஜத்துக்குக் கிடைத்தது. கடந்த 1982ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி எம்.பியாக இருந்தபோது அவருடன் பணியாற்றிய அன்னா ராஜம், டெல்லியில் கடந்த 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார்.

ரிசர்வ் வங்கி ஆளுநருடன் திருமணம்: அன்னா ராஜம் ஆர்.என் மல்கோத்ராவை திருமணம் செய்துகொண்டார். ஆர்.என்.மல்கோத்ரா கடந்த 1985-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்ம பூஷன் விருது: அன்னா ராஜமின் சேவைகளைப் பாராட்டி அவருக்குக் கடந்த 1989-ம் ஆண்டு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியது. ஐ.ஏ.எஸ் பணியில் அவர் சேரும்போது, பெண்கள் திருமணம் செய்துகொண்டால் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்' என்ற விதி அமலில் இருந்தது. பின்னர் அந்த விதி திருத்தப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு மும்பையில் அன்னா ராஜம் மல்ஹோத்ரா இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் அவர் பெண்களுக்கு என வகுத்துச் சென்ற பாதையில் பல பெண்கள் பயணித்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+