கேரள மாநிலத்தில் கோழிக்கோடு அல்வாவின் பெயரைக் தெரிந்திருக்காத மலையாளிகள் இருக்கமாட்டார்கள். அதிக தேவையுள்ள இந்த அல்வாவை பிராண்டட் வணிகமாக மாற்றி 4 நண்பர்கள் சாதித்தது எப்படி? அவர்களின் கதைதான் இது. இவர்களின் அல்வா மீதான மோகம் ஒரு வணிக சாம்ராஜ்யமாக மாற்றியுள்ளது. கோழிக்கோட்டில், 4 பால்ய நண்பர்கள் சேர்ந்து இந்த அல்வா பிசினஸை தொடங்கி இன்று சக்சஸ்ஃபுல் ஆக நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் அல்வாவிற்கு பெயர் பெற்ற இடம் திருநெல்வேலி இருக்கடைதான். அதேபோலத்தான் கேரளாவில் இந்த நண்பர்கள் கோழிக்கோடன் அல்வா என்ற அடையாளத்திற்கு முயற்சிக்கின்றனர்.
ஆம், கோழிக்கோடு கடற்கரைகள், உணவகங்கள், விருந்தோம்பல் மற்றும் பல்வேறு சுவைகளுக்கு பெயர் பெற்ற நகரம். இங்கு பெரும்பாலும் அரேபியர்கள் காலத்திலிருந்தே வணிகம் நிறைந்தது. கோழிக்கோடு அல்வாவின் சுவை இப்போது வெளிநாடுகளிலும் பிரபலமாகி வருகிறது.

கோழிக்கோடு மண்ணில் நேசித்து வளர்ந்த 4 பால்ய நண்பர்கள் அவர்கள் மனதில் எழுந்த எண்ணம்தான் இன்று ஃபுல்வா அல்வாவாக மாறியுள்ளது. இன்று அது அவர்களின் வாழ்க்கையை மாற்றிவிட்டது. கடந்த ஆண்டு, அதாவது 2023-ல் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட வணிகம் இன்று வேகமாகமான வளர்ச்சியை எட்டியுள்ளது. உலகளவில் ஏற்றுமதி செய்யும் வணிகத்தில், கோடிக்கணக்கான ரூபாய்களை ஈட்டுகிறது.
இந்த ஃபுல்வா அல்வா, ஷபாஷ் அகமது என்.சி, ஜானு முஹம்மது சி, இர்ஃபான் ஜாபர் எஸ் மற்றும் தெஷ்ரிப் அலி பிகே ஆகிய நண்பர்களால் தொடங்கப்பட்டது. இவர்கள் அல்வாவை விரும்பியதால் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டனர். இது 2023 இல் 'ஃபுல்வா' என்ற பிராண்டின் கீழ் தொடங்கியது. ஹல்வா ஆரம்பத்தில் பாரம்பரிய சுவைகள் உட்பட 24 வகையான சுவைகளில் விற்கப்பட்டது. உலர்ந்த தேங்காய் மற்றும் நீர் முலாம்பழம் போன்ற சுவைகள் இதில் அடங்கும்.
பாரம்பரியம் முறைப்படி உள்ளூர் சுவையுடன் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு பயணத்தை மேற்கொண்டு 2023 ஆம் ஆண்டில் ஒரு பரிசோதனையாகத் தொடங்கிய நிலையில், இது விரைவில் வேகமாக வளர்ந்து ஒரு செழிப்பான வணிகமாக உருவாகியுள்ளது. இவர்கள் நால்வரும் இப்போது லட்சக்கணக்கான வருவாயை ஈட்டி, உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களைக் கவர்ந்து வருகின்றனர். அவர்களின் கதை ஒரு இனிப்பு உபசரிப்பு பற்றியது மட்டுமல்ல. இது ஆர்வம், புதுமை மற்றும் கேரளாவின் சுவையை உலகிற்கு கொண்டு வருவதற்கான உறுதியைப் பற்றியது.
இவர்கள் அல்வாவை ஒரு அழகாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகளில் வைத்து விற்பனை செய்கின்றனர். இது பார்ப்பதற்கே எல்லோரையும் கவரும் அளவிற்கு உள்ளது. ஆன்லைனிலும் இவர்கள் விற்பனை தொடங்கியுள்ளதால் அல்வா பிரியர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஆர்டர்கள் அதிகளவில் குவிகின்றன. குறிப்பாக, வெளிநாட்டில் வசிப்பவர்களும் இவர்களது அல்வாவிற்கு அடிமை என்று சொல்லப்படுகிறது. ஆரம்பிக்கப்பட்ட ஒரே மாத்தில் பிற நாடுகளில் இருந்து 300 ஆர்டர்கள் வந்ததாகவும், இவற்றில் இங்கிலாந்து, துருக்கி, ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து அதிக ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
தொடங்கப்பட்ட ஒரே வருடத்தில் ஃபுல்வா அல்வா ரூ.84 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. இது அதன் இனிப்பு சுவையால் மட்டும் வெற்றி பெறவில்லை. இந்த நால்வரின் ஆர்வம், கடின உழைப்பு மற்றும் புதுமையான முயற்சிகள் அனைத்தும் அவர்களை உயரத்திற்கு கொண்டுள்ளது. நண்பர்கள் தற்போது அல்வாவை பிரபலமான வாழைப்பழ சிப்ஸ் உட்பட கேரளாவிற்கு தனித்துவமான மற்ற சுவைகளை வெளியிடுவதே அவர்களின் நோக்கமாக உள்ளது.
பாரம்பரியமான சிவப்பு, மஞ்சள், கறுப்பு நிற அல்வாக்களை தவிர இவர்களின் கோழிக்கோடன் அல்வாக்கள் கோதுமை, மாம்பழம், பாசிப்பழம், பச்சை மிளகாய், கிவி, ஏலம், தேங்காய், மாதுளை, திராட்சை, அன்னாசி, கேரட், தேன் பழம், பாதாம், நெய், போன்ற சிறப்பு சுவைகளை ஃபுல்வா அல்வாவை வழங்குகின்றனர். உலர்ந்த பழங்கள், மற்றும் சாக்லேட் ப்ளேவர்களுடன், சிவப்பு, மஞ்சள், கருப்பு, இளஞ்சூடான தேங்காய் மற்றும் கிரீன் சில்லி அல்வா ஆகியவை அதிகம் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications