துபாய்: கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிடித்துக் கொண்டு கொட்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப கேரளாவை சேர்ந்த ஒரு நபருக்கு இரண்டாவது முறையாக துபாயில் ஒரு மில்லியன் டாலர்கள் மதிப்பிலான லாட்டரி கிடைத்திருக்கிறது.
பால் ஜோஸ் மவேலி என்பவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். 60 வயதான இவர் 1999ஆம் ஆண்டு முதலே துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு துபாயில் லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே ஒருமுறை லாட்டரி வென்ற இவர் தற்போது இரண்டாவது முறையாகவும் லாட்டரி வென்றிருக்கிறார். இரண்டாவது முறையாக இவருக்கு துபாயில் 1 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட லாட்டரி விழுந்திருக்கிறது.

துபாய் டூட்டி ஃப்ரீ நிறுவனம் தங்களுடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் இந்த மாதத்திற்கான லாட்டரி வெற்றியாளர் யார் என்பது குறித்த விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி கேரள மாநிலத்தில் சேர்ந்த பால் ஜோஸ் மவேலி இந்த முறை லாட்டரி வென்று இருக்கிறார் என்றும் அவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பால் ஜோஸ் 1999 ஆம் ஆண்டிலிருந்து துபாய் டூட்டி ஃப்ரீ லாட்டரிகளை வாங்கி வருகிறாராம். அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து இந்த லாட்டரிகளை வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர் . இந்த முறை இவர் தன்னுடைய 17 நண்பர்களோடு இணைந்து துபாய் டூட்டி ஃப்ரீ லாட்டரி வாங்கி இருக்கிறார் .அவருக்கு மே 19ஆம் தேதி 3532 என்ற எண் கொண்ட லாட்டரி கிடைத்தது. இந்த நிலையில் மே மாதத்திற்கான வெற்றியாளராக பால் ஜோஸ் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
இவர் ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு இதேபோல துபாய் பியூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லினியர் என்ற லாட்டரியை வென்றார் .அப்போது 9 நண்பர்களோடு இணைந்து அவர் லாட்டரி சீட்டை வாங்கி இருந்ததால் தனக்கு கிடைத்த ரொக்கத்தை 9 நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டார். இந்த முறையும் தனக்கு கிடைக்கும் பணத்தை நண்பர்களுடன் பகிர்வதாக கூறி இருக்கிறார். 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 8.5 கோடி ரூபாய் ஆகும்.
துபாயில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணி செய்து வரும் பால் ஜோஸ், இரண்டாவது முறையாக தனக்கு லாட்டரி விழுந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கலீஜ் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார். துபாய் டூட்டி ஃப்ரீ என்ற லாட்டரி திட்டம் 1999 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லாட்டரியை வாங்குபவர்களில் ஒருவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஜாக்பாட்டை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த லாட்டரி கட்டணம் 22,000 ரூபாய் ஆகும்.
இதனை துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டூட்டி ஃப்ரீ கடைகள் அல்லது ஆன்லைனில் துபாய் டூட்டி ஃப்ரீ இணையதளத்தில் வாங்கிக் கொள்ளலாம். எந்த நாட்டை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். 1999 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை துபாய் டூட்டி ஃப்ரீ லாட்டரியை 251 இந்தியர்கள் வெற்றி பெற்று ஜாக்பாட்டை தட்டிச் சென்றுள்ளனர்.
More From GoodReturns

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் வாழ் இந்தியர்களுக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி பதிவு செய்ய சொல்கிறதா இந்திய தூதரகம்? உண்மை என்ன?

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications