கொரோனாவின் காரணமாக முடங்கி போயுள்ள தொழில் துறைகள், சேவை நிறுவனங்கள் என பலவும் லாக்டவுனுக்கு பிறகு சற்று துளிர் விடத் தொடங்கியுள்ளன.
அதிலும் லாக்டவுனால் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்ய, பல மாநிலங்கள் அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு கேரளாவில், 20க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் வந்துள்ளதாக அரசு தரவுகள் கூறுகின்றன.
ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாக்கம்
இது குறித்து வெளியான தரவில் ஏற்கனவே கேரளாவில் நிறுவப்பட்ட 5 ஐடி நிறுவனங்கள், விரிவாக்கம் செய்ய கேட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்க உள்ளதாகவும் கேரளா அரசு தெரிவித்துள்ளது. தற்போது டெக்னோ பார்க்கில் உள்ள வின்விஷ் நிறுவனம், ஒரு ஏக்கர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் தனது சொந்த வளாகத்தினை உருவாக்க முடிவு செய்துள்ளது.
2 லட்சம் சதுர அடியில் கட்டமைப்பு
இது தவிர இன்னும் பல நிறுவனங்கள் கேரளாவுக்கு வருவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளன. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா அரசு 100 கோடி செலவில் டெக்னோசிட்டியில் 2 லட்சம் சதுர அடியில் தேவையான வசதிகளை கேரளா அரசு செய்து வருகின்றது. இந்த ஆண்டு டிசம்பரில் இந்த வேலை பூர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டில் இருந்து பணி
பூர்த்தி செய்யப்பட்ட Koratty Infoparkல் ஐபிஎஸ்-ஸின் ஐடி வளாகம் அடுத்த ஆண்டுக்குள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்டுக்கு பிந்தைய சூழ்நிலையில் ஐடி நிறுவனங்களின், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இதே அலுவலகத்தில் இருந்தும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு கலப்பின முறையில் தான் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பல ஆயிரல் மறைமுக வேலை வாய்ப்புகள்
கேரளாவில் உள்ள ஐடி பூங்காக்களில் சுமார் 1.10 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். அதோடு இதன் மூலம் 3.30 லட்சம் பேர் இந்த ஐடி பூங்காக்கள் மூலம் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இது ஐடி ஊழியர்களுக்கு மிக மிக னல்ல விஷயமே.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications