இந்நிய - சீனா எல்லை பிரச்சனை என்னும் முடியாத நிலையில் தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையிலும் சீனா தொடர்ந்து எல்லைப் பகுதியில் தனது ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் சிறு கிராமத்தையே எல்லையில் உருவாகியுள்ளது.
தற்போது புதிதாகச் சீனா-வின் மிக முக்கியமான உளவு கப்பல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா எனத் தென்னிந்திய மாநிலங்களைக் குறிவைத்து இந்திய கடலில் நிற்கிறது.
சீனாவின் யுவான் வாங் 5
இந்தியப் பெருங்கடல் சீன உளவுக் கப்பலான 'யுவான் வாங் 5' நிற்கும் நிலையில் இராணுவ மற்றும் மூலோபாயத் தாக்கங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல், இந்திய பாதுகாப்பு கட்டமைப்பிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிலை உருவாகியுள்ளது.
சீன நீர்மூழ்கிக் கப்பல்
ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் டிராக்கிங் பிரிவில் சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் ஒரு தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளது என்றால் மிகையில்லை. 2014 இல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட சீன நீர்மூழ்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் இந்தக் கப்பல் அதன் திறன்களில் பல மடங்கு ஆபத்தானது.
750 கிலோ மீட்டர் ஏரியல் ரீச்
சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் மூலம் சுமார் 750 கிலோ மீட்டர் ஏரியல் ரீச் கொண்டு உள்ளது. இந்தக் கப்பல் மூலம் இந்திய எல்லைக்குள் இருக்கும் கல்பாக்கம், கூடங்குளம், மற்றும் அட்டாமிக் ரிசர்ச் சென்டர் ஆகியவற்றை டிராக் செய்ய முடியும்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம்
அனைத்தையும் தாண்டி தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம் எனத் தென்னிந்தியப் பகுதியில் இருக்கும் 6 முக்கியத் துறைமுகங்களைச் சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் டிராக் செய்யவும், கண்காணிக்கவும் முடியும். இந்தக் கப்பல் கொண்டு தென்னிந்தியப் பகுதியை முழுமையாக ஆய்வு செய்ய முடியும்.
எல்லை
தற்போது இந்திய ராணுவம் சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் குறித்தும் அதன் செயல்பாடுகளைக் குறித்தும் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. சீனாவின் பாதிப்பு மேற்கு எல்லை பகுதியைத் தாண்டி தற்போது தென்னிந்தியப் பகுதிகளுக்கும் வந்துள்ளது...
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications