2025-26 நிதியாண்டின் புதிய காலாண்டு தொடங்கும் நிலையில், ஜூலை 2025 முதல் பல நிதி விதிகள் மற்றும் கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரயில் டிக்கெட் கட்டணங்களில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் ஜிஎஸ்டி விதிகளில் மாற்றங்கள் உள்ளன. இவை அனைவரின் தனிப்பட்ட மற்றும் குடும்ப நிதி நிர்வாகத்தையும் பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு : இந்திய ரயில்வே, ஜூலை 1, 2025 முதல் ரயில் பயண டிக்கெட் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்புகளுக்கும், குறிப்பிட்ட சேவைகளுக்கும் மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீண்ட தூர பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஏறக்குறைய செலவுகளால் சுமைக்குள்ளான பொதுமக்களுக்கு, இந்த கட்டண உயர்வு மேலும் நெருக்கடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ரயில்வே தரப்பில், இந்த முடிவு சேவை மேம்படுத்தல் மற்றும் வணிக வலிமையை நிலைநிறுத்தும் முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பயணிகள், குறிப்பாக பயணச் செலவில் நுட்பமாக கவனம் செலுத்தும் குடும்பங்கள் மற்றும் வேலைக்காக பயணம் செய்வோர், இம்மாற்றத்தால் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கட்டணத் திட்டத்தின்படி, 500 கிலோ மீட்டர் வரை உள்ள சாதாரண இரண்டாம் வகுப்பு பயணத்திற்கு எந்த கட்டண உயர்வும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், 500 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தூரங்களுக்கு, பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 0.005 கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது என்றும், பயணிகளுக்கு அதிகச் சுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரயில்வேத் துறை விளக்கியுள்ளது.
புதிய கட்டண மாற்றத்தின் அடிப்படையில், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (ஏசி அல்லாத வகை) பயணிப்பவர்கள் இப்போது ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 1 பைசா அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது சிறிய அளவிலான உயர்வாக இருந்தாலும், நீண்ட தூர பயணிகள் மத்தியில் கவலைக்கு வழிவகுக்கிறது.
ஏற்கனவே பயணச் செலவுகளை கட்டுப்படுத்த முயலும் குடும்பங்கள் மற்றும் இடமாற்ற வேலைக்காக பயணிக்கும் பணியாளர்கள், இந்த உயர்வால் மொத்த பயணச் செலவில் மாற்றம் ஏற்பட்டுவிடும் எனக் கணிக்கப்படுகிறது. ரயில்வே தரப்பில், இந்த உயர்வு சேவைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசி வகுப்புகளுக்கு எவ்வளவு கட்டணம்..?: புதிய ரயில் கட்டண முறையில், ஏசி (AC) வகுப்புகளில் பயணிப்பவர்களுக்கு அதிகபட்ச கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2 பைசா அதிகமாக வசூலிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாற்றம், குறுகிய தூரப் பயணங்களைக் பெரிதாக பாதிக்காது என்றாலும், நீண்ட தூர ஏசி பயணங்களுக்கு செலவைக் கணிசமாக உயர்த்தும். இதனால், ஏசி வகுப்பில் பயணிக்க விரும்பும் பயணிகள், முன்னதாகவே தங்கள் பட்ஜெட்டில் மாற்றங்களை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த உயர்வு, வசதியுள்ள சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
புதிய பான் கார்டு + ஆதார் சரிபார்ப்பு : சமீபத்தில் வெளியான விதிகளின் படி, புதிய பான் கார்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கணினியில் நகல் செய்யப்பட்ட அல்லது மோசடி செய்யப்பட்ட பான் கார்டுகளின் பரவலை தடுக்கும் நோக்கத்துடன், அதிகாரிகள் உறுதி நடவடிக்கைகளை கடுமையாக்கி வருகின்றனர். இந்த விதிகள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
மாதாந்திர GSTR-3B படிவம் திருத்த முடியாது : சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க்கு (GSTN) அறிவிப்பின் படி, ஜூலை 1ஆம் தேதி முதல் மாதாந்திர GST கட்டணப் படிவமான GSTR-3B திருத்த முடியாததாகும். ஜிஎஸ்டி போர்டல் முன் நிரப்பப்பட்ட GSTR-3B படிவத்தை வழங்குகிறது. இதில் ஜிஎஸ்டிஆர்-1, GSTR-1A மற்றும் ஐஎஃப்எஃப் ஆகியவற்றில் அறிவிக்கப்பட்ட வெளிப்புற விநியோகங்களின் அடிப்படையில் வரி பொறுப்பு தானாக நிரப்பப்படும்.
இதுவரை வரி செலுத்துபவர்கள் தானாக நிரப்பப்பட்ட மதிப்புகளை GSTR-3B படிவத்தில் திருத்த முடியாமல் இருந்தாலும், தற்போதைய நடைமுறையில் அவர்கள் அதை திருத்தி வருவார்கள். ஆனால், புதிய விதி அமல் வந்தால், இப்போது வரி செலுத்துபவர்களுக்கு இந்த திருத்தம் கிடைக்காது.
வருமானவரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு : மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2024-25 நிதியாண்டு மற்றும் 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி (ITR) தாக்கல் செய்யும் காலக்கெடுவை செப்டம்பர் 15, 2025 வரை நீட்டித்துள்ளது. இதன் வாயிலாக மேலும் சில மாதங்கள் சேர்த்து வருமானவரி தாக்கல் செய்ய வாய்ப்பு பெறுவார்கள்.
ஜூலை 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை : டெல்லி அரசு அடுத்த மாதம் முதல் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களுக்கு ஜூலை 1 முதல் எரிபொருள் வழங்குவதை தடை செய்ய இருக்கிறது. இதன் மூலம், பழைய மற்றும் மாசு உண்டாக்கும் வாகனங்கள் நகரின் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க தடைபடுத்தப்படுகின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications