ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சாமானிய மக்களின் பாக்கெட்டுகளில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். அந்த வகையில் வருகின்ற டிசம்பர் மாதத்திலும் சில மாற்றங்கள் வரவுள்ளது. தொலை தொடர்பு துறை மாற்றங்கள் முதல் பயண கட்டண மாற்றங்கள் வரை டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள மிக முக்கியமான மாற்றங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
போலி OTP-களை கண்டறிதல்: ஏமாற்றி OTP-களைப் பெற்று பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காகவும் மக்களுக்கு பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவும் இந்தியா தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதிக்குள் எங்கிருந்து ஒரு செய்தி அனுப்பப்படுகிறது என்பதை டிராக் செய்யும் வசதியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இது நிதி மோசடியை குறைத்து நுகர்வோரை பாதுகாப்பாக வைத்திருக்கும். இதை மீறும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு OTP பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் ஒரு குறிப்பிட்ட நெட்வொர்க்கை பயன்படுத்தும் மக்கள் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் சேவைகளை பெறும்போது OTP பெறுவதில் தாமதம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
மாதாந்திர எல்பிஜி விலையில் மாற்றம்: ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (OMC) ஒவ்வொரு மாதமும் எல்பிஜி விலையில் மாற்றம் செய்யும். அதே போலவே இந்த டிசம்பர் மாதத்திலும் எல்பிஜி விலையை மாற்றி அமைத்துள்ளது. கடந்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் அக்டோபர் மாதத்தில் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் கமர்சியல் சிலிண்டர் விலை 48 ரூபாய் அதிகரித்தது. டிசம்பர் மாதத்திற்கான மாற்றங்கள் குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகப்படவில்லை என்றாலும், இந்த மாதமும் இதே விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்: பல வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு ரிவார்ட்கள் மற்றும் சலுகைகளை டிசம்பர் 1 முதல் மாற்றத் திட்டமிட்டு உள்ளன.
எஸ் பேங்க் கிரெடிட் கார்டு: பயனர்களுக்கு விமானம் மற்றும் ஹோட்டல்கள் தொடர்பான ரிவார்ட் புள்ளிகளில் வரம்பு அமைக்கப்பட உள்ளது.
HDFC பேங்க்: ஒரு காலாண்டுக்கு ரூ.1 லட்சம் வரை செலவழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இலவச ஓய்வறை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
SBI மற்றும் ஆக்ஸிஸ் பேங்க்: எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் பேங்க் இணைந்து தங்கள் ரிவார்ட் பாயிண்ட்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை திருத்தியுள்ளன.
மாலத்தீவு கட்டணம்: இந்தியாவிலிருந்து மாலத்தீவை சுற்றி பார்க்க செல்பவர்கள் இந்த மாதம் முதல் அதிக விமானக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில் எக்கானமி வகுப்பு பயணிகளுக்கான பிளைட் கட்டணம் ரூ.2,532 ரூபாயிலிருந்து ரூ.4,220 ஆக உயர உள்ளது.
அதேபோல பிசினஸ் வகுப்பு பயணிகளின் கட்டணம் 10,129 ரூபாயாக அதிகரித்துள்ளது முன்பு பாதிக்குப் பாதியாக இருந்த விலை இந்த முறை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணிகள் 20,257 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். இதில் சில மாற்றங்கள் ஒவ்வொருவரின் மாத சம்பளத்தில் குறிப்பிடதக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்த மாற்றங்கள் குறித்து தெரிந்து வைத்துக் கொண்டு உங்கள் நிதி திட்டமிடலை செய்வது அவசியம்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications