இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். 2025-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புதிய படிவங்களில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் வருமான வரி செலுத்துபவர்கள் ஈ-ஃபைலிங் போர்ட்டலில் புதிய படிவங்கள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும். இன்றையப் பதிவில் இந்த ஆண்டு வருமான வரி அறிக்கை படிவங்களில் செய்யப்பட்டுள்ள 7 முக்கிய மாற்றங்கள் குறித்து தான் பார்க்கவுள்ளோம்.
ITR 1 மற்றும் ITR 4 ஐ தாக்கல் செய்வதற்கான தகுதி விரிவாக்கம்: இந்த ஆண்டு வருமான வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய மாற்றங்களை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 போன்ற படிவங்களை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யும் தகுதி அளவுகோலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி மியூச்சுவல் ஃபண்ட் நிதிகளில் இருந்து நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்துவோர் ரூ.1.25 லட்சத்தை தாண்டாத பட்சத்தில் ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 போன்ற படிவங்களை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாம்.

ஆதார் என்ரோல்மென்ட் ஐடி ஏற்றுக் கொள்ளப்படாது: 2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்களில் இந்த மாற்றமும் ஒன்று. அதாவது இனி பான் விண்ணப்பத்திற்கு ஆதார் எண்ட்ரோல்மென்ட் ஐடி ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதேபோல வருமானவரி தாக்கல் செய்வதற்கும் ஆதார் நம்பருக்கு பதிலாக ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்தி தாக்கல் செய்ய முடியாது. இந்த ஆண்டு வருமான வரி படிவங்கள் அதாவது ஐடிஆர் 1, ஐடிஆர் 2, ஐடிஆர் 3 மற்றும் ஐடிஆர் 5 போன்ற படிவங்களில் ஆதார் எண்ட்ரோல்மென்ட் நம்பரை வழங்குவதற்கான இடம் நீக்கப்பட்டுள்ளன.
வரிமுறையைத் தேர்ந்தெடுக்கும் வசதி: வணிகத்தின் மூலம் வருமானம் பெறும் வரி செலுத்துவர்கள் தனி நபர்களைப் போல ஒவ்வொரு நிதியாண்டும் புதிய வரிமுறை மற்றும் பழைய வரிமுறைக்கு மாற்றம் செய்ய முடியாது. வருமான வரித் துறையின் விதிகளின்படி வணிகங்களின் மூலம் வருமானம் பெறுபவர்கள் பழைய வழிமுறையிலிருந்து புதிய வழிமுறைக்கு மாற விரும்பினால் ஒரு முறை மட்டுமே மாற முடியும். அதற்கும் வருமான வரித்துறைக்கு படிவம் எழுதி சமர்ப்பிக்க வேண்டும்.
ITR படிவத்தில் TDS-ஐ குறிப்பிடுதல்: இந்த முறை வருமான வரி செலுத்தும் போது, அது எந்த படிவமாக இருந்தாலும் சரி அதில் வரி செலுத்துவோர் 2025-ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்தில் எந்த டிடிஎஸ் பிரிவின் கீழ் வரி கழிக்கப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மூலதன ஆதாய வரிகளில் மாற்றம்: 2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டது. அதன் படி பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், வீடு, நிலம் அல்லது வேறு ஏதேனும் மூலதன சொத்துக்களை விற்பதன் மூலம் வருமானம் பெற்றிருந்தால் சரியான தொகையையும் அதற்கான வரியையும் கணக்கிட கண்டிப்பாக விற்பனை தேதியை தெரிவிக்க வேண்டும்.
ரூ. 1 கோடியைத் தாண்டினால் சொத்து விபரங்கள் கட்டாயம்: ரூ. 50 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறும் வரி செலுத்துவோருக்கு இந்த ஆண்டு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இனி மொத்த வருமானம் ரூ.1 கோடியைத் தாண்டினால் தான் வரி செலுத்துபவர்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பிற பொறுப்புகள் பற்றி தெரிவிக்க வேண்டும்.
பிரிவு 80DD மற்றும் 80U-இன் கீழ் விலக்கு கோருவதற்கான ஊனமுற்றோர் சான்றிதழ்: வருமான வரி செலுத்துபவர்கள் பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்து ஊனமுற்ற நபர்களுக்காக செலவு செய்திருந்தால் பிரிவு 80DD மற்றும் 80U-வின் கீழ் வரி விலக்கு கோர முடியும். இந்த ஆண்டு வரி விலக்கு கோரும் போது ஊனமுற்றோர் சான்றிதழின் அக்னாலேஜ்மென்ட் நம்பரை குறிப்பிடுவது முக்கியம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications