போட்டிக்கு தயாராகும் கியா.. உற்பத்தியை அதிகரிக்க திட்டம்..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தை கியா மற்றும் எம்ஜி ஆகிய இரு நிறுவனங்கள் வந்த பின்பு பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு உள்ளது. குறிப்பாகக் கார்களின் தரம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் அனைத்து தரப்பினும் வாங்கும் விலை அளவீடுகள்.

இதனால் மக்கள் மத்தியிலும் புதிய கார்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதை ஈடு செய்யும் வகையில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் கடுமையாகத் திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. இதற்கு ஒரு உதாரணம் சமீபத்தில் அறிமுகமான மஹிந்திராவின் XUV 700 மாடல் எஸ்யூவி கார்.

இந்நிலையில் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காகக் கியா நிறுவனம் தனது உற்பத்தி அளவை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளது.

கியா மோட்டார்ஸ்

கியா மோட்டார்ஸ்

கியா மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகமான குறைந்த காலகட்டத்திலேயே அதிகமானோருக்குப் பிடித்த நிறுவனமாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை. இந்நிறுவனத்தின் சர்வீச்ஸ் மற்றும் நீண்ட கால அடிப்படையின் கார்களின் பயன்பாட்டு ஆகியவை குறித்து மக்கள் மத்தியில் கருத்து நிலவினாலும் இந்நிறுவனத்தின் வர்த்தகம் ஒவ்வொரு காலாண்டிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

 உற்பத்தி அதிகரிக்கத் திட்டம்

உற்பத்தி அதிகரிக்கத் திட்டம்

இந்நிலையில் கியா மோட்டார்ஸ் இந்தியாவில் தனது உற்பத்திகளை அதிகரிக்க, குறிப்பாக உள்நாட்டில் தயாரிக்கும் பணிகளை அதிகரிக்க அனைத்து தொழிற்சாலையிலும் 3வது ஷிப்ட் துவங்க உள்ளது. இதனால் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தில் உற்பத்தி அளவு கிட்டதட்ட 40 சதவீதம் அதிகரிக்க உள்ளது.

 கியா தொழிற்சாலையில் 3வது ஷிப்ட்

கியா தொழிற்சாலையில் 3வது ஷிப்ட்

கியா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் 3வது ஷிப்ட் கொண்டு வருவதன் மூலம் ஊழியர்களின் தேவை அதிகரிக்கும். இதன் மூலம் புதிதாக வேலைவாய்ப்புகள் கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை, விற்பனை, டிரான்ஸ்போர்ட் பிரிவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 2019 ஜூலை முதல்

2019 ஜூலை முதல்

கியா நிறுவனம் 2017ல் இந்தியாவில் தொழிற்சாலை கட்ட அனுமதி பெற்று ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் பகுதியில் தொழிற்சாலை அமைத்தது. 2019 ஜூலை மாதத்தில் கார்களின் உற்பத்தியைத் துவங்கிய கியா முதல் முறையாகச் செல்டோஸ் கார்களை அறிமுகம் செய்தது. இதன் பின்பு சோனட் கார்களை அறிமுகம் செய்து இந்தியச் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.

 கியா புதிய கார்கள் அறிமுகம்

கியா புதிய கார்கள் அறிமுகம்

தற்போது கியா மோட்டார்ஸ் இந்தியாவில் புதிதாக யுட்டிலிட்டி கார்களையும், ஹேட்ச்பேக் கார்களையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இவ்விரு கார்களும் தான் இந்தியாவில் அதிகளவிலான சந்தையைப் பிடித்துள்ளது. எனவே இப்பிரிவில் புதிய கார்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின்பு தொழிற்சாலையில் 3வது ஷிப்ட் திட்டத்தைக் கொண்டு வந்து உற்பத்தியை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 3 லட்சம் கார்கள் விற்பனை

3 லட்சம் கார்கள் விற்பனை

2019 ஆகஸ்ட் மாதம் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது விற்பனையைத் துவங்கி இன்று வரையில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான கார்களை நாடு முழுவதும் விற்பனை செய்துள்ளது. ஒரு புதிய கார் நிறுவனத்திற்கு இதுவரை இப்படியொரு வரவேற்பும், வர்த்தகம் இதுவரை கிடைத்தது இல்லை. இந்த நிலையில் கியாவின் ஹேட்ச்பேக் கார் மிகப்பெரிய வெற்றியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாதம் 25,000 கார்கள்

மாதம் 25,000 கார்கள்

இந்த 3வது ஷிப்ட் அறிமுகத்தின் மூலம் ஆந்திராவில் இருக்கும் தொழிற்சாலையில் உற்பத்தி அளவு ஒரு மாதத்தில் தற்போது இருக்கும் 18,000 இருந்து 25,000 ஆக உயரும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் இந்தக் கியா மோட்டார்ஸ் நிறுவனம்.

கியா XY கார்

கியா XY கார்

கியா அடுத்தாகச் செல்டோஸ் எக்ஸ் வரிசையில் புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய எஸ்யூவி கார் 9.95 லட்சம் முதல் 17.65 லட்சம் ரூபாய் அளவில் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இதேபோல் கியா XY என்ற புதிய காரையும் சோதனை செய்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+