சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
38 வயதாக கூடிய அஸ்வின் ரவிச்சந்திரன் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பவுலர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

முன்னதாக அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் அஸ்வின் ரவிச்சந்திரன் கல்வி தகுதி மற்றும் அவருடைய குடும்ப பின்னணி குறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.
பொதுவாக விளையாட்டில் உச்சத்தில் இருப்பவர்கள் படிப்பில் பெரிய அளவில் இருப்பது கிடையாது, இதற்கு இந்திய கிரிக்கெட் அணியிலேயே பல உதாரணங்களை காட்ட முடியும், ஆனால் நம்ம அஸ்வின் கொஞ்சம் வித்தியாசமானவர்.
அஸ்வினை பொருத்தவரை சென்னை பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியில் தொடக்க கல்வியை பெற்றவர். பின்னர் செயின்ட் பீடே பள்ளியில் மேல்நிலை பள்ளி படிப்பை முடித்தார். இதனை அடுத்து சென்னை எஸ்எஸ்என் கல்லூரியில் ஐடி பிரிவில் பிடெக் மேற்படிப்பை முடித்தார். தான் விளையாட்டு மட்டுமில்லாமல் கல்வியிலும் சிறந்த திகழ்ந்தேன் என ஒரு பேட்டியில் அவரே குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரனும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். ரவிச்சந்திரன் கிளப் லெவல் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் விளையாடியவர். அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருந்தாராம். கூட்டு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஸ்வினுக்கு கிரிக்கெட் விளையாட்டுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாங்கித் தந்து இந்த விளையாட்டில் அவர் தொடர்ந்து பயிற்சி பெற்று வெற்றி அடைய காரணமாக இருந்தது அவருடைய தாத்தா என சொல்லப்படுகிறது.
அஸ்வினின் பெற்றோர் வேலையில் பிஸியாக இருந்த நிலையில் அவருக்கு பராமரிப்பாளராக இருந்த பெண்மணியும் இவருக்கு கிரிக்கெட்டில் பெருமளவில் ஊக்கமளித்தாராம். அஸ்வினின் ஒட்டு மொத்த குடும்பமும் அவர் கிரிக்கெட்டில் உயரத்தை எட்ட தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி உறுதுணையாக நின்றுள்ளது.
அஸ்வின் தனது 9 வயதிலிருந்து கிரிக்கெட் விளையாட தொடங்கி விட்டார் . பயிற்சியாளர் சந்திர சேகர ராவின் தலைமையில் ஒய்எம்சிஏ அணியின் வீரராக இவர் தோன்றினார். பின்னர் செயிண்ட் பீடே பள்ளியில் சேர்ந்த போது அங்கே இருந்த கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற தொடங்கினார். அப்போது சி கே விஜயகுமார் இவருடைய பயிற்சியாளராக இருந்தார்.
பின்னர் முன்னாள் வீரர்கள் டபிள்யூ வி ராமன், சுனில் சுப்பிரமணியன் ஆகியோரும் இவரின் பந்துவீச்சு திறமைகளை மேம்படுத்த உதவியுள்ளனர். 17 வயதுக்குட்பட்ட வீரர்களுக்காக கிரிக்கெட் அணியில் இவர் தொடக்க ஆட்டக்காரராகவும் களமிறங்கியுள்ளார்.
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அட்சய பாத்திரம்!! ஒவ்வொரு நொடிக்கும் காசு!!

தோனி-க்கு நிகராக சஞ்சு சாம்சன்.. குரு சிஷ்யன் என்றால் சும்மாவா..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications