இந்தியாவின் முன்னணி பெண் பணக்காரர்களில் ஒருவரும், பயோகான் நிறுவனத்தின் நிறுவனரான கிரண் மஜூம்தார் ஷா, பெங்களூரு நகரத்தின் உள்கட்டமைப்பு பிரச்சினைகளைப் பற்றி நீண்ட காலமாக விமர்சனம் செய்து வருகிறார்.
பெங்களூரின் வளர்ச்சியின் முகமாக கருதப்படும் கிரண் மஜூம்தார் ஷா, இந்நகரின் மோசமான டிராபிக், மழை வெள்ள பிரச்சனை, கழிவுகள், முதலீடுகளும் - நிறுவனங்கள் வெளியேறுவது குறித்து நகரின் நிர்வாக அமைப்பையும், கர்நாடக அரசையும் தொடர்ந்து விமர்சனம் செய்துள்ளது. ஆனால் இந்த முறை வெளிநாட்டவர் முன்னணிலையில் பெங்களூரின் மோசமான நிலை அவரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.

கிரண் மஜூம்தார் ஷா சமூக ஊடக தளமான எக்ஸ் வெளியிட்ட பதிவில் ஒரு வெளிநாட்டு வணிகர் ஒருவர் பெங்களூரில் தன்னை பார்க்க வந்தாகவும், அவர் பகிர்ந்துள்ளா கருத்துக்களை தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கிரண் மஜூம்தார் ஷா-வின் பெங்களூரின் டிராபிக் பிரச்சனையை தாண்டி இது நகரத்தின் சாலைகள் மற்றும் குப்பை பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
டிவிட்டர் பதிவு
பெங்களூருவில் உள்ள பயோகான் பார்க் வளாகத்திற்கு வந்த அந்த வெளிநாட்டு வணிகர், கிரண் மஜூம்தார்-ஷாவிடம், "சாலைகள் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளன? சுற்றிலும் ஏன் இவ்வளவு குப்பை இருக்கிறது? அரசு முதலீட்டை ஊக்குவிக்க விரும்பவில்லையா?" என்று கேட்டுள்ளார். இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரு, இத்தகைய அடிப்படை பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் ஒப்பீடு
அந்த வெளிநாட்டு வணிகர் கடைசியாத சீனாவிலிருந்து வந்திருந்ததால், இந்தியாவை அதனுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். "சீனாவிலிருந்து வந்திருக்கிறேன், இந்தியா ஏன் தனது செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த முடியவில்லை? குறிப்பாக, இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போது சூழ்நிலை மிகவும் சாதகமாக இருக்கும் போது? ஏன் இத்தகைய சூழ்நிலை நிலவுகிறது" என்று அவர் கூறியதாக கிரண் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ORR சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் சிஇஓ பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாகவே பெங்களூர் முழுவதும் சாலைகள் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து கிரண் மஜூம்தார் ஷா-வின் தற்போதைய பதிவு கர்நாடக அரசுக்கு பெரும் பிரச்சனையாக விளங்கி வருகிறது.
கிரண் மஜூம்தார்-ஷா, பெங்களூருவின் சிதைந்து வரும் உள்கட்டமைப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார்.
More From GoodReturns

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications