சென்னை: தற்போது பல்வேறு இளைஞர்களுக்கும் மக்களின் நவீன தேவைகளுக்கு ஏற்ப புதிதாக தொழில்களை தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. இப்படி ஸ்டார்ட் அப் ஐடியாக்களோடு இருக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால் அதற்கு முதலீடு செய்ய தேவையான பணம் இல்லாததால் அவர்களால் தொழில் தொடங்க முடியாமல் போகிறது.
இப்படி சிறந்த ஐடியாவுடன் இருக்கும் ஆனால் போதிய நிதி இல்லாத நபர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள ஒரு திட்டம் தான் முதல் விசி (MUDHAL VC).

கிஸ் ஃப்லோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுரேஷ் சம்பந்தம் ஐடியா நிலையில் உள்ள ஸ்டார்ட் அப்களுக்கு நிதி உதவி அளித்து ஊக்குவிக்கும் வகையில் முதல் விசி எனும் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை மையமாகக் கொண்டு தொடங்கப்படும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதற்காகவே இப்படி ஒரு திட்டத்தை தொடங்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தங்களிடம் சிறந்த ஸ்டார்ட் டப் ஐடியா இருக்கிறது என கருத்துபவர்கள் முதல் விசி-ஐ தொடர்பு கொண்டு ஐடியாக்களை தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவதற்கு தேவையான நிதி உதவியை வழங்குவதோடு மட்டுமில்லாமல் ஒரு நிறுவனத்தை எப்படி தொடங்க வேண்டும் அதற்கு எப்படி எல்லாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் நெட்வொர்க்கிங் எப்படி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளது.
ஸ்டார்ட் அப்களின் பள்ளியாக விளங்கும் அமெரிக்காவின் ஒய்காம்பினேட்டர் போல தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்படும் என சுரேஷ் சம்பந்தம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதலில் பயிற்சி அளித்து பின்னர் முதலீடு அளிக்கும் அணுகுமுறை அடிப்படையில் முதல் விசி செயல்படும் என தெரிவித்துள்ள சுரேஷ் சம்பந்தம் முதலீட்டை பயன்படுத்துவதற்கு முன்பாக தொழில் முனைவோர் அதற்கு தயாராக இருப்பதை உறுதி செய்வதே தங்களின் முதன்மையான நோக்கம் எனக் கூறியுள்ளார்.
கடந்த 24 மாதங்களில் தங்களுடைய ஐடியா பட்டறை மூலம் 15 ஸ்டார்ட் அப்களை தேர்வு செய்து முதல் விசி ஏற்கனவே அதில் முதலீடு செய்துள்ளது எனக் கூறியுள்ளார் .அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் 125 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டுமே முதல் விசி முதலீடு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே முதல் விசி திட்டத்தின் மூலம் Amura, Bversity, BookingBee, MeenSatti, Mushroom MaMa, Social Gallery உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு பெற்றுள்ளன.
இந்த திட்டம் தமிழ்நாட்டை ட்ரில்லியன்ட் டாலர் பொருளாதரமாக மாற்றும் அரசின் முயற்சிக்கு ஒரு சிறந்த பங்களிப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார். புதிய ஸ்டார்ட் அப்கள் மட்டுமின்றி ஏற்கனவே தொடங்கி வெற்றி பெற முடியாமல் தவிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் இதில் ஆலோசனைகள் வழங்கப்படும் என சுரேஷ் சம்பந்தம் கூறியுள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications