பல்வேறு விதமான கலாச்சாரங்கள் மற்றும் வளங்களை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு மற்றும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிப்பதற்கான சிறந்த வழி என்றால் ரயிலில் பயணிப்பது தான். இந்திய இரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே அமைப்பாகும், சுமார் 7,000-திர்க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ஒரு நாளில் 23 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இது ஒரு பிரம்மாண்டமான அமைப்பாக இருந்தாலும், இதில் பயணிகள் பின்பற்ற வேண்டிய ஒரு சில விதிகள் உள்ளன.
ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள், ஒரு சில ரயில்வே துறையின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றவில்லை என்றால், ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலை கூட ஏற்படலாம். எனவே எப்பொழுதும் ரயிலில் பயணிப்பவர்கள் ரயில்வே துறையின் விதிமுறைகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பயணிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான இந்திய ரயில்வே விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

டிக்கெட் இல்லாமல் பயணிப்பது: டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்து யாரேனும் பிடிப்பட்டால், அவருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது அந்த டிக்கெட்டின் விலையுடன் சேர்த்து குறைந்தபட்சமாக ரூ. 250 முதல் அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.
இ-டிக்கெட் அவசியம்: ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்து இருந்தால், எலக்ட்ரானிக் டிக்கெட் என்று கூறப்படும் இ-டிக்கெட் உங்களுக்கு வழங்கப்படும். அந்த இ-டிக்கெட்டின் உண்மையான ஐடியை டிக்கெட் செக்கரிடம் காண்பிக்க வேண்டும். டிக்கெட் செக்கர் உங்கள் இ-டிக்கெட்டைச் சரிபார்க்க வரும்போது உங்களிடம் அந்த ஐடி இல்லை என்றால், நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்கள் என்று முடிவு செய்து கொள்வார். இதற்கும் மேலே குறிப்பிட்டுள்ள அதே அபராதங்கள் பொருந்தும்.
வாங்கிய டிக்கெட்டுக்கு மாறாக அதிக டிக்கெட் கொண்ட இருக்கையில் பயணிப்பது: ஒருவர் பாஸ் பெற்ற அல்லது டிக்கெட் வாங்கியதை விட உயர்ந்த வகுப்பில் பயணம் செய்து பிடிபட்டால், அதிகப்படியான அபராதங்களுடன் அந்த வகுப்பில் செல்வதற்கான கட்டணத்தையும், அந்த நபர் செலுத்த வேண்டும்.
டிக்கெட் இல்லாமல் இளைஞர் பயணம் செய்தால் அவருக்கு குறைந்தபட்ச அபராதமான ரூ. 250 மற்றும் கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.
குடிபோதையில் பயணம்: ஒருவர் குடிபோதையில் ரயிலில் பயணம் செய்தாலோ அல்லது பயணம் செய்யும் போது மது அருந்தினாலோ, அந்த நபர் ரயிலில் இருந்து வெளியேற்றப்படுவார். மேலும் அவருக்கு 6 மாத சிறைதண்டனையுடன் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.
புகை பிடித்துக் கொண்டே பயணம்: ரயிலில் பயணிக்கும் பொழுது புகை பிடிக்க அனுமதி இல்லை. யாரேனும் புகை பிடித்து மாட்டிக்கொண்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும்.
அவசரச் சங்கிலி: இந்திய ரயில்வே சட்டம் 141வது பிரிவின்படி, சரியான காரணமின்றி அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினால் ஒரு வருட சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும். சில முறை இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications