வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்..? முதல்ல இந்த ரூல்ஸ்-ஐ படிங்க.. ஓனர்-க்கு இந்த ரைட்ஸ் கிடையாது..!

நகரமயமாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக சொந்த ஊரில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, வாடகை வீடுகளுக்கு உள்ள தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. பலரும் தங்கள் சொந்த வீடுகளை விட்டுக் கொஞ்சநாள் தங்கும் இடமாக வாடகை வீடுகளை தேர்வு செய்கின்றனர். இன்னும் சிலர், காலம் முழுவதும் வாடகை வீட்டிலேயே தங்குகின்றனர். இந்நிலையில் தான், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாடகைதாரரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சட்ட உரிமைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இந்தியாவில் பிளாட், வீடு அல்லது அறையை வாடகைக்கு எடுப்பவர்கள் பெரும்பாலும் சட்ட உரிமைகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் பின்னர் அவதிப்படுகின்றனர். வாடகைதாரராக இருப்பது உங்கள் உரிமைகளை இழப்பதாக அல்ல. சில முக்கியமான சட்டப்பூர்வ பாதுகாப்புகள் உங்களுக்கும் உண்டு.

வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்..? முதல்ல இந்த ரூல்ஸ்-ஐ படிங்க.. ஓனர்-க்கு இந்த ரைட்ஸ் கிடையாது..!

உங்கள் அனுமதி தேவை : நீங்கள் குடியிருக்கும் வீடு, வாடகை வீடாகவே இருந்தாலும் உங்கள் அனுமதியின்றி வீட்டின் உரிமையாளர் உள்ளே வருவது சட்டவிரோதம் ஆகும். முன் அறிவிப்பு ஏதும் இன்றி உங்கள் வீட்டிற்குள் அவர் நுழையக் கூடாது. இது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது.

வாடகை ஒப்பந்த பதிவு அவசியம் :11 மாதங்களுக்கு மேல் வீட்டில் தங்குவோர், முத்திரை வரியுடன் ஒப்பந்தத்தை சட்டப்படி பதிவு செய்திருக்க வேண்டும். சாதாரண காகிதத்தில் எழுதப்பட்ட ஒப்பந்தம் நீதிமன்றத்தில் செல்லாது என்பதால், சட்டப்படி பதிவு செய்வது அவசியமாகும். இது மோசடி சமயங்களில் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

ஒரே இரவில் வெளியேற்ற முடியாது : வாடகை வீட்டில் தங்கியிருக்கும் போது ஏதேனும் சண்டை, வாடகை தாமதம் போன்ற பிரச்சனைகளை காரணம் காட்டி, அந்த வீட்டில் இருந்து உங்களை உடனே வெளியேற்ற முடியாது. வீட்டு உரிமையாளர் உங்களுக்கு முன்கூட்டியே இதுகுறித்து தெரிவித்திருக்க வேண்டும். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அதன் பின்னரே கோர்ட் உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும்.

அட்வான்ஸ் தொகை வரம்புகள் : வாடகை வீடு எடுக்கும்போது, வீட்டு உரிமையாளர் உங்களுக்கு அட்வாஸ் தொகை கேட்கலாம். ஆனால், பல மாநிலங்களில் இதற்கென சட்ட வரம்புகள் உள்ளன. அதாவது, டெல்லியில் அதிகபட்சம் 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க முடியும். அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சட்டப்படி, 2 மாத வாடகை வரை தான் கேட்க முடியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை 3 மாத வாடகையை விட அதிகமாக அட்வான்ஸ் கேட்பது என்பது சட்டத்திற்கு புறம்பானதாகும். (உதாரணமாக, 6 முதல் 10 மாதங்கள் வரை அட்வான்ஸ் தொகை கேட்பது சட்டவிரோதம்)

வாடகை ரசீதுகள் ஏன் அவசியம்..?:வாடகை செலுத்தும் போது, ரொக்கமாக (Cash) கொடுத்தால் கூட, வாடகைதாரர் கேட்டால் வாடகை ரசீதை (Rent Receipt) உரிமையாளர் வழங்க வேண்டும். ஏனென்றால், HRA (House Rent Allowance) கோரிக்கைக்காக உங்கள் பணியிடங்களில் HRA தொகையை பெற வேண்டும் என்றால், வாடகை ரசீது அவசியம். மேலும், உங்கள் வாடகையை செலுத்தியதற்கான சட்ட ரீதியான ஆதாரமாக இந்த ரசீது பயன்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+