கோடக் மகேந்திரா வங்கியின் நிகரலாபம் 26.6 சதவீதம் அதிகரித்து, 2,184.48 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டில் 1,724.48 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே சிஎன்பிசி - டிவி 18 நிபுணர்கள் 1,394.4 கோடி ரூபாயாக லாபம் காணலாம் என்று கணித்திருந்தனர்.
இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் விகிதம் 17 சதவீதம் அதிகரித்து 3,913 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3,350 கோடி ரூபாயாக இருந்தது. நிகர வட்டி மார்ஜின் தொகையானது 4.52% ஆக உள்ளது. இது இன்னும் மதிப்பீட்டில் உள்ளதாகவும் இவ்வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செயல்பாட்டு லாபம் 31 சதவீதம் அதிகரித்து, 3,297 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2,509 கோடி ரூபாயாக இருந்தது.
இதே காசா விகிதம் செப்டம்பர் காலாண்டில் 57.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 53.6 சதவீதமாக இருந்தது.
வட்டி வருவாய் அதிகரித்துள்ள அதே நேரத்தில் கடன் விகிதமும் 4 சதவீதம் குறைந்து 2.04 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே டெபாசிட் விகிதம் 12.2 சதவீதம் அதிகரித்து 2.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒருங்கிணைந்த நிகரலாபம் 22 சதவீதம் அதிகரித்து, 2,947 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் வங்கியின் பங்களிப்பு 2,184 கோடி ரூபாயாக உள்ளது.
இதற்கிடையில் கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் லாபம் 33.6 சதவீதம் அதிகரித்து, 199 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கோடக் மகேந்திரா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் லாபம் 18.8 சதவீதம் அதிகரித்து, 171 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. எனினும் கோடக் பிரைமின் லாபம் 22.7 சதவீதம் குறைந்து, 133 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த செப்டம்பர் காலாண்டில் எல்ஐசி நிறுவனம், கோடக் மகேந்திரா வங்கியில் தனது பங்கு விகிதத்தினை 3.18% பங்குகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் காலாண்டில் 2.45 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோடக் மகேந்திராவின் பங்கு விலையானது 1.36% அதிகரித்து, 1401 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.